.

Sunday, June 24, 2007

துர்காவாக சோனியா : வழக்கு தொடரப்பட்டது.

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் சோனியா காந்தியை இந்துக்களின் துர்காவாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்ததை 'சற்றுமுன்'னில் செய்தி அறிந்திருப்பீர்கள். இது சர்ச்சையை கிளப்பி சுவரொட்டி ஒட்டிய காங்கிரஸ் தொண்டர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தவும் கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த வக்கீல் சுதிர்குமார் இது தொடர்பாக உள்ளூர் கீழ்நிலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில் கூறி இருப்பதாவது:-

சோனியா காந்தியை துர்கையாக சித்தரித்து படம் வெளியிட்டு இருப்பது லட்சக்கணக்கான இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே சோனியா காந்தி மீதும் இந்த படத்தை வெளியிட்ட மற்ற 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

3 comments:

G.Ragavan said...

கோட்டிக்காரப் பயக எல்லா ஊர்லயும் உண்டு போல. சோனியாவின் அரசியலில் ஜெயலலிதா வழியில் போகிற மாதிரி இருக்குன்னு நெனச்சிக்கிட்டிருக்க வேளையில...துர்காவா படம் போட்டிருக்காங்க. ம்ம்ம்...எல்லாம் காலம்.

G.Ragavan said...

அப்புறம் ஜெயலலிதாவை மேரியா, காளியா சித்தரிச்சதுக்கு...ஸ்டாலினை அர்ஜுனராகவும் கருணாநிதியை கிருஷ்ணராகவும் சித்தரிச்சதுக்கெல்லாம் வழக்கு கெடையாதா!

Anonymous said...

சார்! குஷ்பு தான் கற்பின் தெய்வம் என தமிழ்னாடு சட்டசபையில் பிரேரணை வந்தாலும் வரலாம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...