.

Thursday, June 14, 2007

ஜெத்தா: தந்தை வன்புணர்ந்ததாகப் பொய்ப்புகார். மகள் காதலனுடன் கைது!

ஜெத்தா: பாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயது ஸர்னீ என்னும் இளம்பெண் கடந்த ஆண்டு ஜூனில் தனது தந்தை மீதே வன்புணர்வு குற்றம் சுமத்தியிருந்தார். பரபரப்பான இந்தக் குற்றச்சாட்டு உள்ளூர் நீதிமன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இருதரப்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின், தன்னுடைய ஆண்நண்பர் காஷிஃப் என்பவரை மணக்க தந்தை தடை விதித்த காரணத்தால், இப்படியொரு அபாண்டக் குற்றச்சாட்டை வீசியதாக இளம்பெண் ஸர்னீ ஒத்துக்கொண்டுள்ளார். தன் 32 வயது ஆண்நண்பரின் தூண்டுதலே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.காஷிஃப் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அவர் கூறினார்.

முன்னதாக, காஷிஃப் என்கிற அந்த ஆண்நண்பர், சமீபத்தில் தன் மகளை தன் வீட்டிலிருந்து கடத்திச்சென்றதாக 40 வயது தந்தை தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்குப்பின், இளம்பெண் ஸர்னீக்கு எட்டுமாதங்களூம், அவருடைய ஆண்நண்பர் காஷிஃப்புக்கு ஒரு வருடமும் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...