முக்கியமான ஆபரேசன், விபத்து போன்ற நேரங்களில் ரத்தம் தேவைப்படும்போது, அது கிடைக்காமல் பலரும் தடுமாறுவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு உதவுகிறது ஒரு
இணையதளம்.www.indianblooddonors.comஎன்ற அந்த இணையதளத்தில், நமக்கு என்ன குரூப் ரத்தம் தேவை என பதிவு செய்தால் போதும். உடனடியாக ரத்த தானம் செய்ய விரும்புபவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் நோயாளியின் இருப்பிடம் தேடி வருவார்கள். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.எந்த பகுதியாக இருந்தாலும் சரி, எவ்வளவு அரிய குரூப் ரத்தம் தேவைப்பட்டாலும் சரி... தகவல் கிடைத்த 30 நிமிடத்தில் ரத்த தானம் செய்வோர் வருவார்கள் என்கிறார் இந்த இணையதளத்தை நடத்தும் குஷ்ரூ போச்சா. நாக்பூரை சேர்ந்த இவர் 2000ம் ஆண்டில் இந்த இணையதளத்தை தொடங்கினார்.இந்த இணையதளத்தில் ரத்த தானம் செய்ய விரும்பும் 45 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் இதில் யார் வேண்டுமானாலும் தங்கள் பெயர், ரத்த குரூப், தொலைபேசி எண் போன்ற விவரங்களை தந்து பதிவு செய்து கொள்ளலாம்.யாராவது ரத்தம் தேவை என இந்த இணைய தளத்தை தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகே உள்ள ரத்த தான விரும்பிகளுக்கு தகவல் தரப்படும். அவர்கள் உடனே நோயாளியின் இருப்பிடத்துக்கு சென்று ரத்தம் தருவார்கள். யார் வரப் போகிறார்கள் என்ற விவரம், நோயாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
Monday, June 18, 2007
ரத்தம் தேவையா? உதவுது வெப்சைட்.
Posted by
Adirai Media
at
10:30 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment