ஜெ தலைமையில் ஏழு கட்ச்சி ஆலோசனை.

ஜனாதிபதி தேர்தலில் தங்கள் நிலையை முடிவு செய்வதற்காக 7 மாநில கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை யில் சென்னையில் நடை பெற்றது. பரூக் அப்துல்லா, பாத்திமா பீவி, இரா.செழியன் ஆகியோரில் ஒருவரை தங்கள் அணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தலாமா என்றும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. தங்கள் அணிக்கு தேசிய முன்னேற்ற முன்னணி அல்லது தேசிய மக்கள் முன்னணி என்று பெயரிடுவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment