.

Sunday, July 1, 2007

சக்திவாய்ந்த வெடிபொருள் பறிமுதல்: பெரும் விபத்து தவிர்ப்பு

காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு பெஹல்காம் அடிவார முகாமில் இருந்து செல்லும் வழியில் கானாபல் அருகே சக்திவாய்ந்த வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டு செயலிழக்கப்பட்டது. இதையடுத்து, பெரும் விபத்தும் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது.

அனந்த்நாக் டிகிரி கல்லூரி அருகே கேட்பாரற்றுக் கிடந்த ஒரு டிபன் பாக்ஸில் சக்திவாய்ந்த 5 கிலோ வெடிபொருள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அச்சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு வைத்ததற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புதான் காரணம் என்று மாவட்டப் போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் ஜாவீத் அகமது மட்டூ கூறினார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...