.

Sunday, July 1, 2007

கர்நாடகம்: கள் சாராய விலக்கு நடைமுறைபடுத்தப்பட்டது.

ஜூலை 1-ந்தேதி (இன்று) முதல் கள், சாராய கடைகள் மூடப்படும் என்று கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியும் நிதிமந்திரியுமான எடியூரப்பா அறிவித்திருந்த படி இன்று காலை 10 மணி முதல் கள்-சாராய விற்பனை நிறுத்தப்பட்டது.

இதனிடையே கள் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், மாநிலம் முழுவதும் 4 லட்சம் தொழிலாளர்கள் கள் சாராய விற்பனை மூலம் வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யாமல் கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கள் விற்பனைக்கு தொடர்ந்து அனுமதி தர வேண்டும் என்று கேட்டு இருந்தனர்.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அரசுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி உள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...