சிற்பி அறக்கட்டளையின் தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்தி:
கடந்த 12 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் இயங்கி வரும் இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் அளித்து வருகிறது. 2007-ம் ஆண்டுக்கான கவிதை இலக்கிய விருது ம.இ. லெனின் தங்கப்பாவுக்கு வழங்கப்படுகிறது.
'உயிர்ப்பின் அதிர்வுகள்' என்னும் அவருடைய நூல் விருதுக்கு உரியதெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாவலர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் என பல்துறை வல்லுநராகப் புதுவையில் பணியாற்றி வருபவர் தங்கப்பா. தமிழ் நலம், சுற்றுச் சூழல் மேம்பாடு, இளைஞர்களிடம் விழிப்புணர்வு முதலிய கொள்கைகளைப் பேணுவதும் வளர்ப்பதும் இவர் வாழ்வுப்பணி.
கவிஞர் சிற்பி கவிதைச் சிறப்புப் பரிசுக்கு கவிஞர் உமாமகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருடைய 'கற்பாவை' என்னும் நூல் பரிசு பெறுகிறது. பெண் கவிஞர்களில் ஒரு தனித்த பார்வையும் நடையும் இவருக்கு உண்டு.
ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்டது இலக்கிய விருது. ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்டது கவிதைச் சிறப்புப் பரிசு. பரிசளிப்பு விழா ஜூலை 29-ல் பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.
தினமணி
Saturday, July 7, 2007
லெனின் தங்கப்பாவுக்கு சிற்பி இலக்கிய விருது
Labels:
கலை-இலக்கியம்,
தமிழ்,
விருது
Posted by
Boston Bala
at
4:48 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment