.

Tuesday, July 24, 2007

முதல்வருடன் உலக வங்கி இயக்குநர்(இந்தியா) சந்திப்பு.

முதல்-அமைச்சர் கருணாநிதியை இன்று இந்தி யாவிற்கான உலக வங்கியின் புதிய இயக்குநர் இசபெல் குரேரோ சந்தித்தார். அப்போது நிதி அமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் திரி பாதி, நிதித் துறைச்செய லாளர் ஞானதேசிகன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

அப்போது உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழகத்தில் செயல் படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத் தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 9 திட்டங்கள் ரூ.10 ஆயிரத்து 635 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ரூ.2 ஆயிரத்து 160 கோடி மதிப்பீட்டில் செயல் படுத் தப்பட்டு வரும் தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், ரூ.597 கோடி மதிப்பீட் டில் செயல் படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம், ரூ.717 கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து உலக வங்கியின் இயக் குநர் தமிழக அரசுக்கு தனது பாராட்டுதல்களைத் தெரிவித் தார்.

இவர் நமது நாட்டில் பொறுப்பேற்றுள்ள உலக வங்கி யின் முதல் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...