.

Tuesday, July 24, 2007

திமுக,பாமக அறிக்கை போர் தொடர்கிறது

நேற்று முதல்வர் கருணாநிதி ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியை விமரிசிப்பது முறையல்ல, எதற்கும் ஒரு எல்லை உண்டு எனக் கூறியதற்கு இன்று பாமக நிறுவனர் ராம்தாஸ் பதில் அறிக்கை விடுத்துள்ளார்.ஜனநாயக அமைப்பில் அரசியல் கட்சிகள் மக்களின் குறைகளை அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டியது அவர்களின் கடமையாகும், இதற்கு எந்த எல்லையும் இல்லை,நான் எந்த எல்லையையும் மீறவும் இல்லை என அவர் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி ஒரு மூத்த அரசியல்வாதி, ஜனநாயக வாதி. அவருக்கு அரசியல் கட்சிகளின் கடமைகள் பற்றி தெரியும். கட்சிகளின் வாயை அடைக்க முடியாதென்பதும் அவர் அறிவார் என கேள்விகளுக்கு பதில் கூறுகையில் கூறினார்.தங்கள் கட்சி திமுகவிற்கு நட்புடைய கட்சி, எந்தவொரு அரசின் செயலும் தவறென்றால் மக்களின் துயர்நீக்க அதனை அரசிடம் கொண்டுசெல்கிறோம்,அந்த ஜனநாயக கடமையைதொடர்ந்து நிறைவேற்றுவோம் எனவும் கூறினார்.

The Hindu News Update Service

1 comment:

Anonymous said...

Could you please remove the snapshot plugin? It is so annoying to browse and I think it slows down your page load.

thx
usthamizhan

-o❢o-

b r e a k i n g   n e w s...