.

Saturday, July 14, 2007

நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு

நீரிழிவு என்கிற 'இனிப்பு நோய்' வந்தவர்களும் அரிசி உணவு தாராளமாக உண்ணலாம் என்கிற வகையில் புதிய வகை அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;

இதுபற்றி இச்செய்தியில்

'சுகர்'வந்துவிட்டாலே, கோதுமை ரொட்டி, கோதுமை தோசைதான் சாப்பாடு என்றாகி விடுகிறது.
தினசரி கோதுமை, கேழ்வரகு உணவு வகைகளையே சாப்பிடுவதால் சலித்துப் போகும் சர்க்கரை நோயாளிகள், ஒரு வேளையாவது அரிசி சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு தற்போது ஒரு "இனிப்பான' செய்தி வந்துள்ளது.

சர்க்கரை அளவு குறைந்த "மூல்கி' அரிசி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த வகை அரிசி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.

விதை நெல்லில் இருக்கும் குளுகோஸ், கார்போஹைட்ரேட்டை நீக்கி, பின்னர் விதைக்கின்றனர். இதனால், சர்க்கரை அளவு குறைந்த நெல் விளைகிறது. இந்த "மூல்கி' அரிசிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த அரிசியை கொண்டு பிரியாணி, பிரைடு ரைஸ், புலாவ், தக்காளி சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சம் சாதம் என விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு கூடாமல் சீராக இருக்கிறது.

1 comment:

kuppusamy said...

அந்த அரிசி கோவையில் கிடைக்குமா? விலை எப்படி? நல்ல விபரம். நன்றி.

-o❢o-

b r e a k i n g   n e w s...