.

Monday, August 20, 2007

ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த ரூ. 31.5 கோடி

கோரையாறு, குடமுருட்டி ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த மாநில அரசு ரூ. 31.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் ஸ்டாலின் அளித்த பேட்டி:

வெள்ளத் தடுப்புக்காக ரூ. 210 கோடியில் காவிரிக் கரையைப் பலப்படுத்தும் திட்டம் "நபார்டு' உதவியுடன் நிறைவேற்றப்படும். இதற்காக பிரதமரைச் சந்திப்பேன். மேலும், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும், கோரையாறு, குடமுருட்டி ஆறுகளில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ. 31.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ரூ. 47.5 கோடியில் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஸ்டாலின்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...