.

Monday, August 20, 2007

அணுசக்தி உடன்பாடு: நடுக்கத்தில் நடுவன் அரசு.

கவிழ்வதைத் தடுக்க காங். தீவிரம்.
இடதுசாரிகளின் கடும் எச்சரிக்கையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து ஆராயும்.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால் ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்தனர். ஆரம்பத்தில் இடதுசாரிகளின் எச்சரிக்கையை படு சாதாரணமாக எடுத்துக் கொண்டது காங்கிரஸ். வாபஸ் பெற்றால் கவலையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அலட்சியமாக பதிலளித்தார்.

இதனால் கடுப்பான இடதுசாரிகள், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மிகத் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தனர். ஒப்பந்தம் அமல்படுத்தப்படக் கூடாது. மீறினால் ஆதரவு நிச்சயம் வாபஸ் பெறப்படும், தேவையில்லாத பல விளைவுகள் ஏற்படும் என பிரதமரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்தார். மேலும்...

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...