.

Monday, August 20, 2007

தென்காசிபடுகொலை:மேலும் 5 பேர் கைது !

தென்காசியில் நடுரோட்டில் இரு பிரிவினர் வெட்டிக் கொண்டு 6 பேர் படுகொலையான வழக்கில் இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 14ம் தேதி நடந்த இச் சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று இவ்வழக்கில் மேலகரம், நன்னகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கண்ணன், தங்கத்துரை, அலெக்சாண்டர், ஆப்ரகாம், பேரின்பராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் நீதிபதி ஜெயகுமார் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...