.

Friday, August 3, 2007

இந்தியருக்கு காமன்வெல்த் புகைப்பட விருது

2007-ம் ஆண்டுக்கு தெற்காசியாவுக்கான காமன்வெல்த் புகைப்பட விருது இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை மற்றும் வனவிலங்குகளை மிகச்சிறப்பான முறையில் புகைப்படங்களில் கொண்டுவந்ததற்காக சுரேஷ் நாராயணனுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 'இயற்கையின் வெற்றி' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் இவரது புகைப்படக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன.

மெச்சத் தகுந்த புகைப்படங்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தபஸ் முகோபாத்யாயா, ஸ்ரீநிவாச ரெட்டி, பிராணபந்து சமாஜ்பதி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அரிந்தாம் தத்தா, தீரஜ் பால், சுகந்த சின்கா, டி.என்.பராஸ்கர் ஆகியோர் இரண்டாமிடத்தை பெற்றனர்.

தினமணி

The Hindu News :: Suresh Narayanan wins Commonwealth Photographic Award for S. Asia

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...