தனது தொகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வுசெய்ய, விஜயகாந்த் புதன்கிழமை விருத்தாசலம் வந்தார். அங்கு அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார்.
விருத்தாசலத்தில் உள்ள நவாப் பள்ளிவாசல் மதில் சுவர் எழுப்பவும், கிறிஸ்தவ ஆலய புனரமைப்புக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
இதையடுத்து கெங்கைகொண்டான் காலனியைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண்ணுக்கு மூக்குக் கண்ணாடியும், ஆலடி கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்களுக்கு முரசும் (தப்பட்டை), மங்கலம்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட பழையபட்டணம் ஊராட்சிப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஒரு ஆண்டுச் சம்பளம் ரூ. 12 ஆயிரமும் வழங்கினார்.
விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட 13-வது வார்டில் வசிக்கும் பெண்களும், கோ-மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும் தங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வருவதில்லை என்றும், சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் கூறினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக விஜயகாந்த் உறுதியளித்தார்.
தினமணி
Friday, August 3, 2007
மசூதி மற்றும் கிறிஸ்தவ ஆலயத்துக்கு விஜயகாந்த் நிதியுதவி
Labels:
அரசியல்,
ஆன்மீகம்,
சட்டமன்றம்,
தமிழ்நாடு
Posted by
Boston Bala
at
2:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
"ஆசிரியருக்கு ஒரு ஆண்டுச் சம்பளம் ரூ. 12 ஆயிரமும்"
இவ்வளவு குறைவாக இருக்கு!!!
Post a Comment