.

Friday, August 3, 2007

பள்ளிக் கூரை இடிந்து விழுந்தது

நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பில் 1983-ம் ஆண்டுமுதல் இந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை வகுப்புகள் நடைபெற்றபோது பள்ளி ஆசிரியர்கள் இருக்கும் அறைக்கு மேலுள்ள ஓட்டுக்கூரை இடிந்து விழுந்தது. அப்போது அந்த அறையில் யாரும் இல்லை. அருகிலுள்ள அறையில் 9-ம் வகுப்பு மாணவர்கள் இருந்தனர். அவர்கள் அச்சத்தில் வகுப்பறையை விட்டு வெளியேறினர்.

தினமணி

1 comment:

குமரன் (Kumaran) said...

நல்லவேளை அந்த அறையில் யாரும் இல்லை அப்போது.

-o❢o-

b r e a k i n g   n e w s...