.

Tuesday, August 21, 2007

கிளாஸ்கோவில் இறந்தது கபீல் தானா?

பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்று, தீயில் கருகி இறந்தவர் பெங்களூரைச் சேர்ந்த கபீல் அகமதுதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று பெங்களூர் போலீஸôர் கூறுகின்றனர்.

எனவே, அவரது உடலையும் மருத்துவமனையிலிருந்து யாரும் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது எரியும் ஜீப்பை மோதி தகர்க்க பயங்கரவாதிகள் முயற்சி செய்தனர். அப்போது, தீப் பிடித்து எரிந்த ஜீப்பில் இருந்து ஓர் இளைஞரை பிரிட்டிஷ் போலீஸôர் மீட்டனர். அவர், பெங்களூரைச் சேர்ந்த ஏரோனாட்டிகல் என்ஜினீயர் கபீல் அகமது என்று பிரிட்டிஷ் போலீஸôர் கூறினர்.

90 சதவீத தீக் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர் சில வாரங்களுக்கு முன் இறந்தார். அவரது சடலம் ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

""ஸ்காட்லாந்தில் இறந்தது கபீல் அகமதுதானா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் பிரிட்டனில் இருந்து எங்களுக்கு இதுவரை வரவில்லை'' என்று கர்நாடக காவல் துறையின் குற்றப் பிரிவு இணை ஆணையர் கோபால் ஹொசூர் கூறினார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...