.

Tuesday, August 21, 2007

"மணல் குவாரி விதிமுறைகளை மாற்றுக" - இராமதாஸ்

மணல் குவாரி நடத்துவதில் விதிமுறைகளை மாற்றி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

மணல் குவாரியில் இடைத் தரகர்களைத் தவிர்த்து, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத இடத்தில் ஊராட்சியின் ஒப்புதல் பெற்று கனிமவள விதிப்படி மணல் எடுத்து ஆற்றங்கரையோரம் கொட்டி அதிகாரிகளே மணலை விற்க வேண்டும்.

இதைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அரசுக்கு பெருமளவு வருவாய் கிடைக்கும்.


திருவள்ளூர் மாவட்டம், விடையூர் அருகேயுள்ள குசஸ்தலை ஆற்றில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இராமதாஸ் பேசினார்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...