.

Wednesday, February 28, 2007

தமிழகத்தில் - வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள் தகுந்த தொழில் வளர்ச்சியை ப்பெற வேண்டும். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லாததால் அவர்கள் சென்னை மற்றும் வடமாநிலங்களிலேயே வேலை தேடும் சூழ்நிலை உள்ளது. இக்குறையைப் போக்கவும் தமிழகத்தில் வளர்ச்சி சீரான சமான வளர்ச்சியாக இருக்கவும் www.maduraiitians.com என்னும் வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள் ஒரு பார்வை, வளங்கள், தற்போதைய நிலை, எதிர்கால வளர்ச்சி, சாத்திய கூறுகள், அணுகுமுறைகள் தகவல் தொழில்நுட்ப உதவிகள் தகவல்களை

கொட்ரொக்கியை கொண்டுவர வாரண்ட்

கடந்த இருநாட்களாக நாடாளுமன்ற அமளிக்குப் பிறகு பிரதமர் மன்மோகனின் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் ' கூற்றிற்கேற்ப இந்திய அரசு அர்ஜென் டீனாவிற்கு குற்றம் சாட்டப்பட்ட கொட்ரொக்கியை இங்கு கொண்டுவர ஆணை எழுப்பியுள்ளது. வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஈ. அஹ்மத் அதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.மேலும்..

வலிநிவாரணி மாத்திரைகளை அளவிக்குமீறி உண்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும்

வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால், ரத்தக் கொதிப்பு (ஹைபர்டென்ஷன்) நோய் உண்டாகும் என்றி ஓர் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இண்டர்நெல் மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளியாகிய ஆய்வறிக்கை மூலம் இது தெரிய வந்துள்ளது.

நன்றி:- தினமணி

இந்தியாவிற்கு பாகிஸ்தான் திருப்பித் தரவேண்டிய கடன்தொகை ரூ.300 கோடி.

இந்தியாவிற்கு ரூ.300 கோடி பாகிஸ்தான் கடன் பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை இந்திய நாடாளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளுதார புள்ளி விவர அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த போது இந்தியா தனது கடன் தொகையாக ரூ.50 கோடியை பாகிஸ்தானிடன் திருப்பிக் கொடுத்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் தான் தனது கடன் தொகையை இந்தியாவிடம் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதையும் அந்த புள்ளி விவர அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

1990-91 –ம் ஆண்டு பொருளாதார புள்ளி விவர அறிக்கையிலும் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:- தினமணி

புதிய படங்களின் வி.சி.டி, டி.வி.டி வெளியீட்டுக்காக ஒப்பந்தம்

புதிய படங்களின் அதிகாரப்பூர்வ வி.சி.டி, டி.வி.டி வெளியிடுவதற்காக “மோசர்பேர்” – பிரமீட் சாய்மீரா’ நிறுவனங்கள் சென்னையில் செவ்வாய்கிழமை ஒப்பந்தம் செய்துள்ளன.

மேலும்-

பட்ஜெட் 2007 லைவ்

புதுடில்லி : பார்லிமென்ட்டில்2007 08 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்தார். இதில் அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் . அன்னிய செலவாணி கையிருப்பு 180 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும்,பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய நிதியமைச்சர் இதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும் , அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, * விவசாய கடன் வழங்க ரூ 2,25000கோடி ஒதுக்கீடு 2007 08 ம் ஆண்டில் புதிதாக 50 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன்*விவசாயிகளின் நலனுக்காக வானிலை பயீர் காப்பீடு திட்டம் *தமிழகத்தில் பாசனஏரிகள் , குளங்களை சீரமைக்க உலக வங்கி உதவியுடன் ரூ2182 கோடி ஒதுக்கீடு * உரமானியத்திற்கு ரூ22400 கோடி ஒதுக்கீடு * *12192 கிலோ மீட்டர் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் * 50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு புதிய சாதனை * பள்ளிகல்வியை ஊக்குவிக்க 23142 கோடி ஒதுக்கீடு * மேல்நிலை கல்விக்கு3794 கோடி ஒதுக்கீடு* கல்வி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 34 சதவிதம் அதிகரிப்பு * 912 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் உதவிதொகை * 2 லட்சம் ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க திட்டம் * ஆசிரியர் பயிற்சி கல்லுõரிகள் 450 ஆக அதிகரிக்கப்படும் * இந்திய மருத்துவ சிகிச்சைகளை ஊக்குவிக்க கூடுதல் நிதி* எய்ட்ஸ் நோயை ஒழிக்க கூடுதல் நிதி 969 கோடி ஒதுக்கீடு* 1 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 750 கோடியாக அதிகரிப்பு * போலியோ ஒழிப்பிற்கு 1290 கோடி ஒதுக்கீடு * கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை *ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 12000 கோடி ஒதுக்கீடு மேலும் 100 மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை * சுயவேலைவாய்ப்பிற்கு நிதிஒதுக்கீடு 18000 கோடியாக அதிகரிப்பு* பொது வினியோக திட்டப்பணி அனைத்தும் கணினி மயமாக்க முடிவு உள்ளிட்டவை கூறப்பட்டுள்ளன.

தினமலர்

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறையும்?

வருடாந்திர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2006 ல் முடிந்த ஐந்து வருடங்களளில் இருந்த 1.6 சதவிகிதத்திலிருந்து 2026ல் முடியும் ஐந்து வருடங்களில் 0.95%ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

Eco Survey: Population growth to slow down

Population, which is estimated to have gone up from the Census 2001 figure of 1,029 million to 1,112 million in 2006, is projected to increase to 1,400 million by 2026. The well-known ‘demographic dividend’ will manifest in the proportion of population in the working age group of 15-64 years increasing steadily from 62.9% in 2006 to 68.4% in 2026.

Google news

மீண்டும் புறா தூது ! !

சீன ஆராய்ச்சியாளர்கள் ரிமோட் மூலமா புறாக்களை கட்டுப்படுத்தற ஆராய்ச்சிய வெற்றிகரமா நடத்திக் காட்டியிருக்காங்க. கொஞ்ச நாள்ல மறுபடியும் புறா மூலமா தூது விடற பழக்கம் வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.

மேல் விவரங்களுக்கு

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை - $60 பில்லியன்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியைக் கணக்கிட்டு, வரும் 2010 -ஆம் ஆண்டிற்குள் 60 பில்லியன் டாலரை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் தற்போதைய வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால், 75 பில்லியன் டாலரை இலக்காகக் கொள்ளலாம் என்கிறார் நாஸ்காம் தலைவர், கிரண் கார்னிக்.

சமீபத்தில் வெளியான கடந்த வருட (2006) டிசம்பர் மாத புள்ளிவிபர முடிவுகள் இந்த நம்பிக்கையை ஏற்படச் செய்திருக்கின்றன.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு பலமாய் இருப்பதை இம்முடிவுகள் பிரதிபலித்துள்ளன என்று கூறலாம்.

MSN - தமிழ்

அமெரிக்கப் பங்குகள் பின்னடைவு

அமெரிக்க சைன பொருளாதாரங்கள் தளர்வடைகின்றன என்கிற கருத்தின் அடிப்படையில், சைன பங்குகளள அடுத்து அமெரிக்க பங்குகள் வெகுவாக வீழ்ந்தன. டவ் ஜோன்ஸ் குறியீடு 200 புள்ளிகள் குறைந்தது.

Yahoo News.

Google news

அமெரிக்காவில் VolksWagen(VW) கார் வைத்திருப்பவர்களுக்கு..

VolksWagen (VW)கார் நிறுவனம் (அமெரிக்கா) பிரேக் லைட் சுவிட்சில் பிரச்சனை உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரச்சனை உள்ள மாடல் கார்கள்: 1999-2006 model years of the Golf and GTI, 2001-2005 Jettas, 2001-2007 New Beetles and the 2004 R32.

வரும ஏப்ரல் முதல் இலவசமாக பழுதுபார்கப்படும் என அறியப்படுகிறது


MSNBC

Tuesday, February 27, 2007

நாக்பூரில் தொடரும் விவசாயி தற்கொலைகள்

நாக்பூர்: மகாராஸ்ட்ராவில் விதர்பா என்னுமிடத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே 11 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இறந்த 11பேருடன் சேர்த்து பிப்ரவரியில் மொத்தம் 70 பேரும் சனவரியில் 70 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

வங்கி கடன் திரும்பத் தர இயலாததால் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தினமலர்

Views and Analyses
FRONTLINE/WORLD . Rough Cut . Seeds of Suicide PBS
India’s Farmers Bear Brunt of Globalization The Progressive
BBC NEWS South Asia Indian farmer suicide toll rises
DNA - India - One suicide every 8 hours - Daily News & Analysis

ராஜ்யசபாவில் இனி தமிழ் ஒலிக்காது?

ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் யாருமே இனி தமிழில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை இருந்த ஒரே மொழிபெயர்ப்பாளர் நாகசாமி விருப்ப ஓய்வுபெற்று சென்றுவிட்டார்.

வேலைப்பழு அதிகமாயிருப்பதாகவும் தனக்குத் துணையாக வேறு மொழிபெயர்ப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் எனவும் நாகசாமி கடந்த 20 ஆணுகளாக கேட்டுவந்துள்ளார். அவர் ராஜினாமா கடிதம் தந்து 4 மாதங்களாகியும் புதிய மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை.

தினமலர்

புற்று நோய் நிவாரணம் - ஆயுள் காப்பீடு திட்டம்

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்ஷ்யூரன்° புற்றுநோய் நிவாரணத்துக்காக ஒரு விரிவான திட்டத்தை அர்ப்பணித்துள்ளது.


இந்த திட்டத்தின் பெயர் "கேன்சர் கேர்", இது ஆண்கள், பெண்கள் இருவரில் யாரையும் பாதிக்கக் கூடிய புற்று நோய் பிரச்சினைகளின் தேவைகளுகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒப்பற்ற அம்சம் இது புற்று நோய் என்ற நிலையைக் கண்டறியும்போதே பணம் அளிக்க ஆரம்பிக்கிறது என்பதே. இதனால் நோயாளி மற்றும் அவரது / அவளது குடும்பத்தார் நோய்க்கான சிகிச்சைக்கு நிதி உதவியை அது குணமாகும்வரை பெற உதவுகிறது.

மேலும் விபரங்களுக்கு..

வெப் உலகம் , ICICI Prudential

உகாண்டாவில் மீண்டும் உள்நாட்டுப் போர்?

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வேண்டுமானால் 'Last King of Scotland'க்கு கிடைத்திருக்கலாம். நாளையோடு ஒப்பந்தம் முடிவுக்கு வரும் தருணத்தில், Lord's Resistance Army போராளிக்குழு, அமைதி ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துள்ளது. அதிகாரப் பகிர்வில் பேச்சுவார்த்தை முன்னேறாத நிலையில், இராணுவத்திற்கும் எல்.ஆர்.ஏ.விற்கும் மீண்டும் போர் மூளலாம்.

மேலும்: Blow to Uganda peace process : Mail & Guardian Online

-o❢o-

b r e a k i n g   n e w s...