ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு 11.15 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் நாகர்கோயில் - ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்.2659) ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், காயமடைந்த பயணிகள் விசாகப்பட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் ரயில் வழக்கத்தைவிட மெதுவாகச் சென்றுள்ள போதும், தொழில் நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாக, நேரில் பார்வையிட்ட பின் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 0891 - 2575083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TamilMSN.com
Tuesday, June 12, 2007
ரயில் தடம் புரண்டு 100 பேர் படுகாயம்
Posted by
Boston Bala
at
8:54 PM
1 comments
ச: கோவை பாரதியார் பல்கலையில் 'நனோ'நுட்ப சோதனைச்சாலை
கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ500 கோடி மதிப்புள்ள 'நனோ' நுட்பத்திற்கான ஆய்வுசாலை அமைக்கபட உள்ளதாக துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறினார். தமிழக அரசு, பாரதியார் பல்கலைகழகம், இராணுவ ஆய்வுமற்றும் மேம்பாடு நிறுவனம்( DRDO),உடன் அர்கான்சாஸ் பல்கலைக் கழகம் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற விருப்பதாக அவர் கூறினார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
7:37 PM
1 comments
ச:சிவகாசி: பட்டாசுதொழிற்சாலையில் தீவிபத்து: இருவர் மரணம்
சிவகாசியருகே நாராயணபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ பிடித்துக் கொண்டதில் இரு பெண் தொழிலாளர்கள் இறந்தனர்;ஐவர் கடும் தீக்காயங்கள் அடைந்தனர். பட்டாசு ஒன்று திடீரென்று வெடித்ததில் தீ மூண்டது. ஐந்து மணிநேரம் போராடி தீயணைப்பு வண்டிகள் தீயை அணைத்தன.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
7:29 PM
0
comments
ச:தொலைபேசி சேவை உரிமம்: வழங்குமுறைகள் மீளாய்வு
தொலைதொடர்புத் துறையில் பெருமளவு இணைதல்களும் தொழிற்நுட்ப வளர்ச்சிகளும் பல்கிவரும் வேளையில் தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையம் இப்போதிருகின்ற உரிமம் வழங்கின்ற விதிகளை மாற்றியமைக்க அவற்றை மீளாய்வு செய்ய எண்ணியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஒரே உரிமத்தில் ் GSM மற்றும் CDMA வகை செல்பேசி சேவைகளை வழங்க விண்ணப்பித்திருப்பது இந்த மீளாய்விற்கு வழிவகுத்துள்ளது. அந்நிறுவனம் தற்சமயம் தனித்தனி உரிமங்களை வைத்து ரிலையன்ஸ் டெலிகோம் GSM சேவையையும் ரிலையன்ஸ் இன்ஃபோகோம் சிடிஎம் ஏ சேவையையும் வழங்குகிறது.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
7:17 PM
0
comments
ச: குடியரசுத்தலைவர் தேர்தல்: மாயவதி காங்.கூட்டணிக்கு முழு ஆதரவு
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஎஸ்பிக்கும் ஐக்கிய முன்னேற்ற கூட்டணிக்கும் இன்று உடன்பாடு ஏற்பட்டது. யார் அந்த வேட்பாளர் என்பதை அறிவிக்க மறுத்த மாயாவதி மதவாத கட்சிகளுக்கு பிஎஸ்பி எப்போதும் ஆதரவளிக்காது என்று கூறினார்.
DNA - India - Agreement reached with UPA over Prez candidate: BSP - Daily News & Analysis
Posted by
மணியன்
at
7:04 PM
0
comments
நீதிபதிகள் இனி 'My Lord' இல்லை!
கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின்படி நீதிபதிகள் இனி My Lord என்றோ Your Lordship என்றோ விளிக்கப்படமாட்டார்கள். பகரமாக, கண்ணியத்திற்குரிய என்றோ 'கண்ணியம் வாய்ந்த அவையோர்' என்றோ அழைக்கப்படுவார்கள்.
உச்ச; உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு விளிக்கப்படுகையில் கீழ்நீதிமன்றத்தார் 'ஐயா' என்றோ அதற்கிணையான சொல்லாலோ விளிக்கப்பெறுவர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
காலனியாதிக்க கால நடைமுறை மரபுகளில் மாற்றம் வேண்டி கடந்த டிசம்பர் மாதம் இந்திய பார் கவுன்சில் எடுத்த முடிவுக்கும், தொடர்ந்த வழிகாட்டுதலுக்கும் ஏற்ப இவ்வாறு கேரள வழக்குரைஞர்கள் முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கேரள வழக்கறிஞர்களே இம்மாற்றத்தை செயற்படுத்துவதில் முன்னோடிகளாக இன்றுமுதலே இதை நடைமுறைப்படுத்துகின்றனர். நடை, உடைகளில் இல்லாவிட்டாலும், விளிக்கின்ற அடைமொழிகளில் நல்ல மாற்றம் வந்தமைக்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
Posted by
வாசகன்
at
6:45 PM
0
comments
விமானக்கோளாறு: பயணிகள் உயிர் தப்பினர்
இன்று காலை சென்னையிலிருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமொன்றில் முன்புற கண்ணாடியில் விரிசல் காணப்பட்டது. இதையடுத்து, சென்னை நிலைய தரை கட்டுப்பாட்டு நிலையத்தை அவசரமாக தொடர்புகொண்ட விமானஓட்டி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். விமானத்திலிருந்த 139 பயணிகள் உயிர்தப்பினர். அவர்களுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மக்கள் தொ.கா.செய்திஅறிக்கை
Posted by
வாசகன்
at
6:34 PM
0
comments
ச: கிரிக்கெட்: சந்து போர்டே பயிற்சியாளராக நியமனம்
இந்தியாவின் இங்கிலாந்து,அயர்லாந்து பயணங்களுக்கு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் சந்து போர்டே அணி யின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Chandu Borde named manager for England tour - Daily News & Analysis
Posted by
மணியன்
at
6:12 PM
2
comments
கருணாநிதி இன்று டெல்லி பயணம்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து இறுதி செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் சிவராஜ் பாட்டீலை நிறுத்த காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த முடிவை ஏற்க வேண்டுமானால் சோம்நாத் சாட்டர்ஜிக்கு குடியரசுத் துணைத் தலைவர் பதவியை தர வேண்டும் என இடது சாரிகள் நிபந்தனை விதித்துள்ளன. இந்த நிலையில், பாட்டீலுக்கு கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த ஆதரவைத் திரட்ட காஙகிரஸ் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக ஆலோசிக்க முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் அவர் ஆலேசானை நடத்துகிறார். முதல்வருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி உள்ளிட்ட 9 பேர் செல்கின்றனர்.15ம் தேதி வரை டெல்லியில் தங்கவுள்ளார் கருணாநிதி. அப்போது பிரதமர், சோனியா ஆகியோருக்கு கனிமொழியை அறிமுகமும் செய்யவுள்ளார். தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு 15ம் தேதி இரவு சென்னை திரும்புகிறார் முதல்வர் கருணாநிதி.
குடியரசு தலைவர் பற்றி ஜெயலலிதா கூறுகையில் ... குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரான் சிங் ஷெகாவத் சுயேச்சையாக களம் இறக்கப்பட்டால், அவரை ஆதரிக்கலாம் என 3வது அணி தலைவர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி வருவதாக தெரிகிறது.
Posted by
Adirai Media
at
6:04 PM
0
comments
இங்கு மட்டுமல்ல அங்கும்தான் !
சிவாஜி ரிலீஸ் தமிழ் நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அனல் பறக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவாஜி படத்தின் ரிசர்வேஷன் தொடங்கியதை தமிழ்நாட்டில் உள்ள ரஜினி ரசிகர்கள் விழா போல் கொண்டாடினர். இதே போல் அமெரிக்க ரசிகர்களும் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம், பாட்டம் என்று தூள் கிளப்பி விட்டனர். டிக்கெட் புக்கிங் செய்வதற்காக அமெ ரிக்காவில் சிவாஜி திரையிடப் படும் நகரங்களுக்கு மற்ற நகரங் களில் உள்ள ரசிகர்கள் பல மைல் தூரம் காரில் பய ணம் செய்து வந்தனர். மிகப் பெரிய ஆன்மீகச் சொற் பொழிவாளர்கள் அமெரிக் காவுக்கு வரும் போது தான் ரசிகர்கள் இவ்வாறு பல மைல் தூரம் பயணித்து வருவது வழக்கம்.
டிக்கெட் முன் பதிவு தொடங்கியதும் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என்று தங் கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். ரஜினி கட்- அவுட் களை வைத்து தியேட் டரை அலங்கரித் திருந்தனர். "மை நேம் இஸ் பில்லா'' "ராக்கம்மா கையத்தட்டு'' போன்ற ரஜினியின் ஹிட் பாடல்களை போட்டு ரசிகர்கள் தியேட்டர் வாசலில் ஆடினர். 50 வயதைத் தாண்டிய முதியவர்களும் இவ்வாறு ஆடிப்பாடி தங் கள் உற்சாகத்தை வெளிப் படுத்தினர். தமிழ்நாட்டில் இருந்த போது பழைய ரஜினி படங்களின் ரிலீஸ் சமயம் தாங்கள் டிக்கெட் எடுக்கப்பட்ட கஷ்டத்தை சுவையாக ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.சிவாஜி பட ரிலீசை முன் னிட்டு சிறப்பு விழாக்களுக்கும், கலை இரவு போன்ற நிகழ்ச்சி களுக்கும் சிறப்பு விருந்து களுக்கும் அமெரிக்க ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Posted by
Adirai Media
at
5:42 PM
0
comments
தமிழகத்தில் சிக்குன்குன்யா ?
குமரி மாவட்டத்தில் ஒருவர் பழி.
அவர்கள் மூலம் இங்குள்ளவர்களுக்கும் நோய் பரவுகிறது. நேற்று நோய் தாக்கிய பத்துகாணியைச் சேர்ந்த சசி இறந்து விட்டார். அவர் சிக்குன் குனியா தாக்கி தான் இறந்துள்ளார். தனியார் ஆஸ்பத்திரியில் சசிக்கு சிக்குன் குனியா தாக்கி இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான சான்றிதழ் தர மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். சசி மரணத்தை தொடர்ந்து பத்துகாணி மற்றும் அதைச் சுற்றி வசிக்கும் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று நாகர்கோவிலில் இருந்து 22 பேர் கொண்ட மருத்துவ குழு கடையாலுமூடு, பத்துகாணி பகுதிக்கு செல்கிறது. அங்கு வீடு-வீடாக சென்று அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். நோய் தாக்கியவர்கள் யார்-யார்ப அவர்களை தாக்கியது என்ன நோய்ப என்பது குறித்து மருத்துவ குழு ஆய்வு செய்கிறது. மேலும் அந்த கிராமங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
Posted by
Adirai Media
at
2:15 PM
1 comments
ஈரான் மீது இராணுவ நடவடிக்கை - அமெரிக்க அரசியல் குரல்.
ஜோ லீபர்மேன் என்கிற அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் ஈரான் மீது அமெரிக்காவின் இராணுவ தாக்குதலை கோரியுள்ளார். இராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் உதவி வருவதாக குற்றஞ்சுமத்தியுள்ள அவர், செனட்டில் கடந்த ஆண்டு முதல் சுயேச்சையாக செயற்பட்டு வருபவராவார்.
அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியொருவர் வெளிப்படையாக இப்படி பேசியுள்ளது இதுவே முதல் முறை. சைனாவின் ஆயுதங்களை இராக் போராளிகளுக்கு ஈரான் வழங்குவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை "இராக் விடயத்தில் ஈரானின் ஆக்கப்பூர்வ பங்களிப்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம்" என்றது. அமெரிக்க தூதர் ரையான் குரோக்கர் இதுபற்றி தன் ஈரானிய சகாவிடம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
Posted by
வாசகன்
at
1:46 PM
0
comments
சவூதி: பிலிப்பைனியருக்கு STC விலைச்சலுகை!
ஜூன் 12 ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சுதந்திர தினம் என்பதை முன்னிட்டு சவூதி அரேபிய தொலை தொடர்புத்துறை வாழ்த்துக்களுடன் விசேட விலைச்சலுகையினை அறிவித்துள்ளது.
அதன்படி ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இன்று நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்துக்கு தொலைபேசி கட்டணங்களில் 50 சதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தொலைதொடர்புத்துறை உயரதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.
Posted by
வாசகன்
at
11:16 AM
0
comments
விசாகப்பட்டிணம் அருகே ரயில் தடம் புரண்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா என்ற இடத்தில் நேற்றிரவு 11.15 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக ரயிவே வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விபத்தில் நாகர்கோயில் - ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்.2659) ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், காயமடைந்த பயணிகள் விசாகப்பட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த பகுதியில் ரயில் வழக்கத்தைவிட மெதுவாகச் சென்றுள்ள போதும், தொழில் நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாக, நேரில் பார்வையிட்ட பின் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ள ரயில்வே அதிகாரிகள், மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். சிறப்பு பஸ்கள் மூலம் பயணிகள் விசாகப்பட்டிணம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.விபத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 0891 - 2575083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் இவ்விபத்தில் மூன்று பேர் பலியானதாக இன்றுகாலை தனியார் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
Posted by
Adirai Media
at
10:18 AM
0
comments
அரசு பள்ளியில் அவமதித்ததால் தலித் மாணவர்களுக்கு தனி பள்ளிக்கூடம் கிராம மக்களே திறந்தனர்
ராம்கார், ஜுன். 11- ராஜஸ்தான் மாநிலம் தாதி என்ற கிராமத்தில் அரசு பள்ளிகளில் தலித் மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் அவமதித்தனர். இதுபற்றி கிராம மக்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மாணவர்களை அவமதித்து வந்தனர்.
இதனால் தலித் மக்கள் அனை வரும் தங்கள் குழந்தை களை அரசு பள்ளிகளில் இருந்து வாபஸ் பெற்றனர். அவர்களாகவே தனி பள்ளிக்கூடம் அமைத்தனர். 50 மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர் இதற்கான ஒரு அறை கொண்ட வகுப்பு அறையை அவர்கள் கட்டியுள்ளனர்.
இதுபற்றி கிராம மக்கள் கூறும் போது "நாங்கள் சத்தியாக்கிரக முறையில் போராடுவதற்காகவே பள்ளிக கூடம் திறந்து இருக்கிறோம. அரசு மாற்று ஏற்பாடு செய்து தரும்வரை இந்த பள்ளிக் கூடத்தை தொடர்ந்து நடத்துவோம்" என்றனர்.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
1:20 AM
2
comments
b r e a k i n g n e w s...