.

Tuesday, June 12, 2007

விசாகப்பட்டிணம் அருகே ரயில் தடம் புரண்டது.

100 பயணிகள் படுகாயம் .

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா என்ற இடத்தில் நேற்றிரவு 11.15 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக ரயிவே வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விபத்தில் நாகர்கோயில் - ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்.2659) ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், காயமடைந்த பயணிகள் விசாகப்பட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த பகுதியில் ரயில் வழக்கத்தைவிட மெதுவாகச் சென்றுள்ள போதும், தொழில் நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாக, நேரில் பார்வையிட்ட பின் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ள ரயில்வே அதிகாரிகள், மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். சிறப்பு பஸ்கள் மூலம் பயணிகள் விசாகப்பட்டிணம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.விபத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 0891 - 2575083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் இவ்விபத்தில் மூன்று பேர் பலியானதாக இன்றுகாலை தனியார் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...