.

Tuesday, June 12, 2007

தமிழக தலைநகர் சென்னையில் அருந்ததியர்கள் பேரணி

துப்புரவுப்பணி மற்றும் செருப்பு தைக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தப்படும் அருந்ததியர்கள், பட்டியலினத்தவர், ஷெட்யூல்ட் காஸ்ட் அல்லது தலித் மககள் என்றறியப்படுவோரில் மிகப்பின் தங்கியவர்களாவார்கள்.

விடுதலைபெற்று 60 ஆண்டுகள் ஆன பின்னரும் மனித மலத்தை அள்ளும் இழிதொழிலுக்கு இம்மக்களை உட்படுத்தும் கொடுமைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும், தலித்மக்களுக்கான 18 சத இடஒதுககீட்டை ஒரு சதம் உயர்த்தி, அந்த 19 ல் அருந்ததியர்களுக்கு 6 சத உள் ஒதுக்கீடு வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இன்று செவ்வாய்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இப்பேரணிக்கு திரண்டனர். இன்றைய ஆர்ப்பாட்டத்தை மார்கசிஸட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தியுள்ளது.

இதன் பின்னர் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் சமர்பிக்கப்பட்டது.

BBCTamil

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...