.

Tuesday, June 12, 2007

அரசு பள்ளியில் அவமதித்ததால் தலித் மாணவர்களுக்கு தனி பள்ளிக்கூடம் கிராம மக்களே திறந்தனர்

ராம்கார், ஜுன். 11- ராஜஸ்தான் மாநிலம் தாதி என்ற கிராமத்தில் அரசு பள்ளிகளில் தலித் மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் அவமதித்தனர். இதுபற்றி கிராம மக்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மாணவர்களை அவமதித்து வந்தனர்.

இதனால் தலித் மக்கள் அனை வரும் தங்கள் குழந்தை களை அரசு பள்ளிகளில் இருந்து வாபஸ் பெற்றனர். அவர்களாகவே தனி பள்ளிக்கூடம் அமைத்தனர். 50 மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர் இதற்கான ஒரு அறை கொண்ட வகுப்பு அறையை அவர்கள் கட்டியுள்ளனர்.

இதுபற்றி கிராம மக்கள் கூறும் போது "நாங்கள் சத்தியாக்கிரக முறையில் போராடுவதற்காகவே பள்ளிக கூடம் திறந்து இருக்கிறோம. அரசு மாற்று ஏற்பாடு செய்து தரும்வரை இந்த பள்ளிக் கூடத்தை தொடர்ந்து நடத்துவோம்" என்றனர்.

மாலைமலர்

2 comments:

வடுவூர் குமார் said...

நல்ல முன்னுதாரணம்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்

Adirai Media said...

சாதிகள் இல்லையடி பாப்பா...

-o❢o-

b r e a k i n g   n e w s...