.

Tuesday, June 12, 2007

கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தை எதிர்த்து மீண்டும் வழக்கு

கமலஹாசன் 10 வேடத்தில் நடிக்கும் தசாவதாரத்தை எதிர்த்து சினிமா உதவி டைரக்டர் செந்தில்குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் "தசாவரதாரம் படத்தின் கதை தன்னுடையது எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்'' என்று கூறி இருந்தார். ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது செந்தில்குமார் மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் "தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இது பற்றி சரியாக விசாரிக்காமல் தள்ளு படி செய்து விட்டனர். எனவே அந்த படத்தை எங்களுக்கு போட்டு காட்ட வேண்டும் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்'' என்று கூறி இருந்தார்.

தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, தசாவதாரம் படத்தின் திரைக்கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். செந்தில்குமாரும் தனது கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டார்.

Malaimalar.com | HC wants English version of 'Dasavatharam' script

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...