.

Monday, June 11, 2007

ஊழல் அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை!

உதவித் தொகை வழங்குவதில் மோசடி செய்த சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட 17 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் ரூ. 50 கோடி ஊழல் நடந்தது, 2002ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழலில் முக்கிய பங்கு வகித்த, சமூக நலத்துறை வார்டன் மோதி நாயக், சமூக நலத்துறை கணக்குப் பதிவாளர் சங்கர் ராவ் உட்பட நான்கு பேருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 17 பேரில், மற்றவர்க்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இது ஆந்திராவில்!

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...