.

Monday, June 11, 2007

வலுவடைகிறது தென்மேற்கு பருவக் காற்று!

தென்மேற்கு பருவக்காற்று வலுவடைவதையொட்டி வெயிலின் கொடுமை வட மாநிலங்களில் தணியும் வாய்ப்பிருப்பதாக செய்தி நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெயிற் கொடுமையால் அவதியுறும் வட; மத்திய மாநிலங்களின் மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தி.

இப்பருவக்காற்று வெள்ளியன்று மும்பையை தாக்கக்கூடுமென்றும், இடியுடன் கூடிய சூறாவளிக்காற்று வீசும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. டெல்லி உள்ளிட்ட வடமேற்கு இந்தியப்பகுதிகளில் இதனால் கதிரவனின் அனல்மூச்சு குறையலாம் என்று வானிலை ஆராய்ச்சிகளை இச்செய்தி மேற்கோள் காட்டுகிறது.

இப்பகுதியில், அரபிக்கடலில் ஏற்கனவே உருவான பெருஞ்சூறாவளி கோனு ஓமானை தாக்கி சேதம் விளைவித்தது நினைவிருக்கலாம்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...