பீகாரில் தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் மூழ்கியுள்ளன. வீடுகளை இழந்த மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேகுசராய் பகுதியில் அரசு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக நூற்றுக்கணக்கில் பூரி சுட்டு அவற்றை பாக்கெட் போடுகின்றனர் தன்னார்வ தொண்டர்கள்.
நன்றி "தமிழ் முரசு".
Thursday, August 16, 2007
பீகாரில் தன்னார்வ தொண்டர்களின் சேவை!
Posted by
சிவபாலன்
at
9:48 PM
0
comments
'தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு திட்டமில்லை'-மத்திய அரசு
தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இது தொடர்பாக கூறியதாவது: எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அமல் செய்ய வேண்டும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் சுப்புலட்சுமி கூறினார்.
நன்றி: தினமலர்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:38 PM
0
comments
குண்டு பல்புக்கு கல்தா! - அரியானா மக்கள் அசத்தல் - மாதம் ரூ.9 கோடி மிச்சம்
சண்டிகர், ஆக. 16-
நாட்டில் குண்டு பல்பு ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம் அரியானாவில் உருவாகியுள்ளது. இதன்மூலம் அரியானா மின்துறைக்கு மாதம் ரூ.9 கோடி மிச்சமாகியிருக்கிறது.
குண்டு பல்பு எரியவிடுவதால், அதிக அளவு மின்சாரம் செலவாகிறது. அதிக வெப்பத்தையும் இது வெளியிடுவதால், சுற்றுப்புறம் வெப்பமாகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று கூறி, உலக அளவில் குண்டு பல்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறைந்த மின்சக்தியிலேயே அதிக வெளிச்சம் தரும் ப்ளூரசன்ட் விளக்குகளுக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் பிரசாரம் நடந்து வருகிறது.
மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.
Posted by
சிவபாலன்
at
9:14 PM
10
comments
அமெரிக்கா இஸ்ரேேலுக்கு $30பில்லியன் இராணுவ உதவி
அமெரிக்கா இஸ் ரேலுக்கு $30 பில்லியன் அளவுக்கு இராணுவ உதவி வழங்கும் ஒப்பந்தத்தை இன்று செய்தது. சவுதி அரேபியாவுக்கு இதுபோன்ற உதவி வழங்கும் முடிவுடன் இந்த முடிவும் சேர்ந்து வருகிறது. முன்னதாக இஸ்ராயேல், சவுதிக்கு அமெரிக்கா உதவுவதில் தங்களுக்கு எதிர்ப்பு இல்லை எனத் தெரிவித்திருந்தது.
"There is no question that, from an American point of view, the Middle East is a more dangerous region now than it was 10 or 20 years ago and that Israel is facing a growing threat," Mr Burns said. "We look at this region and we see that a secure and strong Israel is in the interest of the United States."
US Offers Israel $30B Aid Package
Israel, US sign 30-billion-dollar defence aid package
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:09 PM
0
comments
ஆந்திர அரசின் முடிவு;சுப்ரீம் கோர்ட் தடை
சுதந்திரப்ப் போராட்டத் துவக்கத்தின் 150வது நினைவுநாளை முன்னிட்டு ஆந்திர அரசு 1500 கைதிகளை அவர்களின் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப் போவாதாக அறிவித்திருந்தது. இதற்கு எதிராக தொட்டரப்பட்ட பொது நல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த முடிவு மோசமான முன்னுதாரணம் என்று கூறி இதற்கு தடை விதித்தது.
SC slams Andhra govt's move to release 1500 convicts
SC restrains AP Govt's decision to release murder convicts
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:59 PM
0
comments
ஹிமாச்சலில் வெள்ளம்: ஆறு சடலங்கள் மீட்பு, 52 பேர் காணவில்லை
இமாச்சல பிரதேசத்தில் நேற்று பெய்த பெருமழையில் சிம்லா மாவட்டத்தில் ஒரு கிராமமே திடீர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது.அந்த இடிபாடுகளை இராணுவத்தினர் மற்றும் துணைராணுவத்தினர் உதவியுடன் அகற்றி பிழைத்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியில் இதுவரை ஆறுபேரின் உடல்களே கிடைத்திருக்கின்றன. இன்னும் 52 பேர் சிம்லாவிலிருந்து 175 கி.மீ தூரத்திலுள்ள கான்வி என்ற அந்தக் கிராமத்திலிருந்து காணவில்லை. மழையினால் ஏற்பட்ட மலைச்சரிவு பெரும் பாறைகளை உருட்டி விட்டு வழியில் இருந்த அனைத்து வீடுகளையும் தவிடுபொடியாக்கியது. இறந்த அறுவரில் ஐவர் பெண்டிர். காணாமல் போனவரிலும் பெரும்பான்மையினர் பெண்களே. அவர்கள் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது இந்த திடீர்மழையும் மலைச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
்HP cloudburst: 6 bodies found, 52 still missing-India-The Times of India
Posted by
மணியன்
at
7:53 PM
0
comments
பெருவில் பூகம்பம்: 72 மரணம், 680 காயம்
தென்னமெரிக்க நாடான பெருவில் ரிக்டர் அளவுகோளில் 7.9 வலிமையுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு 72 பேர் மரணமடைந்துள்ளனர்; 680 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் லிமாவில் உயர்ந்த கட்டிடங்கள் தொடர்ந்த இரு நில அதிர்வுஅலைகளால் ஆடின. அலுவலகத்திலிருந்து பணியாளர்கள் வெளியே ஓடினர்.கடலோர மாநிலமான இகாவில் கிருத்துவ தேவாலயமொன்று சரிந்ததாகவும் வானொலி நிலையங்கள் கூறுகின்றன.
இந்நிலநடுக்கத்தையொட்டி பெரு,சிலி,ஈகுவேடர்,கொலம்பியா நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
Powerful quake hits Peru, 72 killed, 680 hurt
Posted by
மணியன்
at
1:52 PM
0
comments
தென்காசி கொலைச் சம்பவம் மத மோதல் அல்ல!
தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான மோதலால் ஏற்பட்டவை அல்ல என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ஜே.எஸ்.ரிஃபாயீ தெரிவித்தார்.
திருநெல்வேலியில் புதன்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான சம்பவம் அல்ல. நீண்ட நாள்களாகப் பகையோடு இருந்துவரும் இரு கோஷ்டிகளுக்கு இடையிலான மோதல்தான்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்து முன்னணி நிர்வாகி குமார்பாண்டியன் கொலைச் சம்பவம், அதைத் தொடர்ந்து தமுமுக நிர்வாகி ஷேட்கான் தாக்கப்பட்டது ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பிணையத்தில் இருந்தபோது அவர்கள் இரு தரப்பையும் ஒரே இடமான தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் கையொப்பமிடச் செய்து நீதித்துறை உத்தரவிட்டது வருத்தம் அளிக்கிறது.
காவல்துறையும், உளவுத் துறையும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த மோதலை தடுத்திருக்க முடியும். உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறை டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்தை இரு மதங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து ஆதாயம் தேட நினைப்பவர்களை தமுமுக கடுமையாக கண்டிக்கிறது.
இந்த மோதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இதுமட்டுமின்றி அவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்.
கைது நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவிகள் மீது பொய்வழக்கு போடக் கூடாது என்றார் ரிஃபாயீ.
Posted by
Adirai Media
at
1:00 PM
0
comments
Wednesday, August 15, 2007
ரஷ்யாவில் டாக்டர் படிப்பு குறித்த கருத்தரங்கம்
சென்னை, ஆக. 15: ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடை தராமலும், நுழைவுத் தேர்வு எழுதாமலும் சேர்ந்து படிப்பது தொடர்பான மூன்று நாள் இலவச கல்விக் கருத்தரங்கம் -கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.
எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளை அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்தக் கருத்தரங்கம் தொடங்குகிறது.
இதுதொடர்பாக ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஏ.அமீர்ஜஹான், மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.நஜிருல் அமீன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நமது நாட்டில் மருத்துவக் கல்வி படிக்க லட்சக் கணக்கில் நன்கொடை தர வேண்டி உள்ளது. ஆனால், ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடையும் கிடையாது. நுழைவுத் தேர்வும் இல்லை.
பிளஸ்-டூ படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்ட -பழங்குடி மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதும்.
தவணை முறை கட்டணம்: ஆறு ஆண்டுகளுக்கான படிப்புக்கு ரஷியாவில் ரூ.10 லட்சம் செலவு ஆகும். இதை தவணை முறையில் மாணவர்கள் செலுத்தலாம். இந்தத் தொகையை வங்கிகள் மூலம் கல்விக் கடனாகப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் மருத்துவம் பயின்றவர்களுக்கு பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தப் படிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில், உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகளை 963, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை -600 084 என்கிற அறக்கட்டளை முகவரியிலோ, 2661 4485, 93800 05652, 98406 52729 என்கிற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
தினமணியிலிருந்து நேரடி பதிப்பு செய்யப்பட்டுள்ளது
Posted by
சிறில் அலெக்ஸ்
at
10:38 PM
1 comments
இந்திய மொழிகளில் தேட கூகிள் கருவிகள்
கூகிள் இந்தியா, இந்திய மொழிகளில் இணையத்தில் தேட புதிய கருவிகளை அறிமுகம் செய்யவிருக்கிறது. தற்போது இவை கூகிள் ஆய்வகத்தில்(Labs) இருக்கின்றன.
தமிழ் உட்பட்ட 14 மொழிகளில் தேட தட்டச்சுக் கருவிகளை குறுங்கருவிப் பட்டைகளாக(Gadgets/Widgets) பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட கூகிள் துவக்கப் பக்கத்தில் (iGoogle Personalized page) இந்தக் கருவிப் பட்டைகளை நிறுவி ஒருங்குறியில்(Unicode) தேடலாம்.
மேலும் ஆங்கிலவழியில் ஹிந்தியில் தட்டச்சவும் ஒரு கருவியை கூகிள் உருவாக்கியுள்ளது.
இந்திய மொழிகளில் தேடும் கருவிக்கு இங்கே சுட்டவும்
ஹிந்தி தட்டச்சுக் கருவிக்கு இங்கே சுட்டவும்.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:25 PM
4
comments
Flash News: இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு
மெல்போர்ன் :அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தாங்கள் அளிக்கும் யுரேனியத்தை கொண்டு இந்தியா அணு ஆயுதம் தயாரிக்காமல் உள்ளதா என்பதை கண்காணிக்க தங்களது ஆய்வாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா நிபந்தனை விதித்துள்ளது.
- நன்றி: தினமலர்
Posted by
சிவபாலன்
at
7:11 PM
1 comments
சவூதி: இன்று இந்தியாவுக்கு 50% தொலைபேசி கட்டணச்சலுகை.
இந்தியாவின் இனிய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சவூதிஅரேபிய தொலைதொடர்புத்துறை
இன்று 24 மணி நேரத்துக்கு இந்தியாவுக்கான தொலை அழைப்புகளுக்கு 50% கட்டணக்குறைப்பு செய்து தன்னுடைய சுதந்திரதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
இதே போன்ற சலுகை ஆகஸ்ட் 14ல் பாக்கிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 17ல் இந்தோனேசியாவுக்கும் வழங்கப்படுகிறது.
Posted by
வாசகன்
at
1:47 PM
0
comments
லட்சக் கணக்கில் பொம்மைகள் திரும்பப்பெறப்படுகின்றன
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு உடல் ஊறுவிளைவிக்கும் பொம்மைகள் லட்சக்கணக்கில் மார்க்கெட்டிலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன. இவை சீனாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள்.
மாட்டெல் எனும் நிறுவனம் கடந்த மாதகாலத்தில் இரண்டாவது முறையாக தன் பொம்மைகள்ளை திரும்பப்பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
மாட்டெலின் பங்குகள் இன்று 6% சரிந்தன.
Mattel Recalls Chinese Toys, Second Time in Two Weeks (Update4)Bloomberg
Mattel recalls 18m more Chinese toys
UPDATE 3-Mattel recalls millions more Chinese-made toys
Posted by
சிறில் அலெக்ஸ்
at
3:00 AM
0
comments
ஈராக்கில் 175பேர் பலி
ஈராக்கில் சற்றுமுன் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 175பேர் இறந்திருக்கலாம் என அறியப்படுகிறது. மூன்று எரிபொருள் லாறிகளைக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு ஈராக்கில் யாஜிடீக்கள் எனும் பழங்குடியினர் வாழும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
At least 175 killed in north Iraq bombings: army - ்Reuters
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:53 AM
4
comments
சற்றுமுன் 1000 போட்டி முடிவுகள்்
சுதந்திர தின சிறப்புக் கொண்டாட்டமாக சற்றுமுன் போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
போட்டி முடிந்து பல நாட்கள் கழிந்துவிட்டன. சற்றுமுன் 2500 பதிவுகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமதமானாலும்.. இதோ போட்டி முடிவுகள் வந்துவிட்டன.
எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பு இல்லை என்றே நினைத்தோம். செய்திவிமர்சனம் என்பது பதிவர்களுக்கு எளிதாய் வரவேண்டிய ஒன்று. ஒரு மாத காலத்தில் ஏதேனும் ஒரு செய்தி நம்மை பாதிக்கும். அதுகுறித்து குறைந்தது இரண்டு கருத்துக்களாவது நமக்குத் தோன்றும். அதை உங்கள் பாணியிலே எழுத வேண்டியதுதான் மிச்சம். உலக அரங்கில் வலைப்பதிவர்களில் பெரிதாக கவனிக்கப்படும் விதயங்களி ஒன்று செய்தி விமர்சனம்.
அதிக பங்கெடுப்பு இல்லை என்பதால் பரிசு அறிவிப்பில் சில (நல்ல) மாற்றங்களைக் கொண்டு வந்து எல்லோருக்கும் சிறப்பான பரிசுகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.
முதல் பரிசு சேவியர் - தலைமுறையை முடமாக்கும் குளிர்பானங்கள்
ரூ. 2500 மதிப்புள்ள புத்தகங்கள்
இரண்டாம் பரிசு வெயிலான் கனியா கனி்களும், கண்ணாடி கனவுகளும்…..
ரூ. 1750 மதிப்புள்ள புத்தகங்கள்
மூன்றாம் பரிசு 1 சி.வி.ஆர் வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4
ரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்கள்மூன்றாம் பரிசு 2 உண்மைத் தமிழன் அடுத்த ஜனாதிபதி யார்? கட்சிகள் போடும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..
ரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்கள
ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் இரண்டு படைப்புக்களுக்கு ரூ500 வீதம் பரிசுக்கள் அறிவித்திருந்தோம். போட்டி வலுவாயில்லாததாலும் இந்த முயற்சியில் தனித்தன்மையோடு வந்து பங்களித்தவர்கள் எல்லோருமே வெற்றியாளர்கள் என்கிற உண்மையை விளக்கவும் பங்களித்த எல்லோருக்குமே ரூ. 400 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு.
போட்டியில் பங்கெடுத்து பரிசுபெறுபவர்கள்.
பெனாத்தல் சுரேஷ்(விக்கி பசங்க சார்பில்)
நாகை சிவா
லோகேஷ்
கதிரவன்
வெட்டிப்பயல்
ஷைலஜா
சந்தோஷ்
சத்தியா
வவ்வால்
தென்றல்
இலவசக் கொத்தனார்
மகேஷ்
உலகம் சுற்றும் வாலிபி
ஜீ
அருண பாரதி
இளா
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டி சிறக்க முயற்சிகள் மேற்கொண்ட சற்றுமுன் குழு நண்பர்களுக்கு நன்றி. எங்களோடு பரிசுகளை வழங்க முன்வந்த மாற்று குழுவுக்கு நன்றி. புத்தகங்களை வழங்க முன்வந்திருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கும் நன்றி.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
12:14 AM
25
comments
b r e a k i n g n e w s...