துபாயில் பிட்ஸ் பிலானி (BITS PILANI ) பட்டமளிப்பு விழா
துபாயில் பிரபல இந்திய பொறியியல் கல்லூரியான பிட்ஸ் பிலானியின் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் அமீரக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலி பின் அப்துல்லாஹ் அல் காபி கலந்து கொண்டு நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு பட்டங்களை வழங்கினார்.
டாக்டர் அப்துல்லாஹ் அல் கரம், அய்யூப் காசிம், இந்திய துணைத்தூதர் வேணு ராஜாமணி, ETA ஸ்டார் குரூப் இயக்குநர் ஈஸா அல்குரைர், மேலாண்மை இயக்குநர் சையத் எம் ஸலாஹ¤தீன், நிதிதுறை இயக்குநர் ஆரிப் ரஹ்மான், பிட்ஸ் பிலானி இயக்குநர் டாக்டர் எம்.எம். ராமச்சந்திரன், டாக்டர் எஸ். வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August850.xml§ion=theuae&col=
150 students get degrees at BITS-Pilani convocation
Friday, August 31, 2007
துபாயில் பிட்ஸ் பிலானி (BITS PILANI ) பட்டமளிப்பு விழா
Posted by
முதுவை ஹிதாயத்
at
11:05 PM
0
comments
இலங்கையில் இன்று --- ஆகஸ்ட் 31, 2007
கடந்த சில வருடங்களில் 5700 க்கு மேலானோர் காணாமல் போயுள்ளனர்
இலங்கையில் கடந்த சில வருடங்களில் காணமல் போன 5700 க்கு மேற்பட்டோர் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆராய்ந்து வருகிறது.
2007ல் மட்டும் நூற்றுக்கணக்கானோர் நாடு பூராவும் காணமல் போயுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை [Amnesty International (AI)] தெரிவித்துள்ளது.
அதிகமான ஆட்கடத்தல்கள் இலங்கை இராணுவத்தினராலும் அதனுடன் இணைந்து செயற்படும் துணைக் குழுக்களாலுமே நடாத்தப்படுகிறது எனவும் இதில் காணாமல் போனோர் தமிழர்களும் முஸ்லிம்களுமே ஆவர் எனவும் பல மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஆதாரம் : BBC சிங்கள சேவை.
இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி
இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத [all time low] வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 113.36 இலங்கை ரூபாய்களாக நாணய மதிப்பு குறைந்துள்ளது.
இலங்கை நாணயத்தின் பெறுமதி வரும் வாரங்களில் ஒரு அமெரிக்க டொலர் 118 இலங்கை ரூபாய்கள் எனும் வகையில் வீழ்ச்சியடையலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் [economic analysts ]தெரிவித்துள்ளார்கள்.
ஆதாரம் : Daily Mirror
கொழுப்பில் உள்ள பிரிட்டிஸ் தூதுவரலாயத்தின் சில சேவைகள் சென்னைக்கு இடமாற்றம்
கொழுப்பில் உள்ள பிரிட்டிஷ் தூதுவராலயத்தின் விசா வழங்கும் சேவை மற்றும் விசா விண்ணப்பங்கள் ஏற்கும் சேவை போன்றன சென்னைக்கு மாற்றப்படவுள்ளதாக கொழுப்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது பற்றி இன்னும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இறுதி முடிவு எடுக்கவில்லையெனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, பிரிட்டிஷ் தூதரகம் இச் சேவைகளை கொழுப்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக டெய்லி மிரர் தெரிவிக்கிறது.
கொழும்பில் உள்ள Visa Facilitation Service (VFS) எனும் தனியார் நிறுவனம் வேறு பல நாட்டு தூதரகங்களுக்காக இச் சேவையை ஏற்கனவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : டெய்லி மிரர்
அரசு அனுசரணையுடன் ஆட்கடத்தல், ஆசியாவில் இலங்கை முதலிடத்தில்!
பலவந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது.
அரசாங்கத்துக்கும் அதன் சார்பு அமைப்புகளுக்கும் எதிரானவர்களே கடத்தப்பட்டு காணாமற் போகச் செய்யப்படுகிறார்கள். இவற்றில் ஈடுபடுவோருக்கு தண்டனை விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அறிவித்துள்ளது, ஹொங்ஹொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு.
ஆதாரம் : உதயன்
"இலங்கையில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறது பிரிட்டன்" - இலங்கை அரச உயர் அதிகாரி
இலங்கையில் மகிந்த ராஜபக்சாவின் ஆட்சியைவிட ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியையே பிரிட்டன் விரும்புவதாக இலங்கை அரசின் சமாதனச் செயலகத்தின் செயலர் இரஜீவ விஜேசிங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்காக மனித உரிமை என்ற போர்வையில் இலங்கை மீது அழுத்தங்களைத் திணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆதாரம்: IANS
இலங்கை விமானப்படைத் தாக்குதலில் காலை இழந்த 6 வயதுச் சிறுவனுக்கு பிரபாகரன் நிதியம் உதவி

தை 2007 ல் மன்னார் மாவட்டத்தில் இலங்கை விமானப் படைகள் தாக்கியதில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 34 பேர் காயமடைந்தும் இருந்தனர். இத் தாக்குதலில் ஒரு 6 வயதிச் சிறுவன் ஒரு காலை இழந்தான். அவனின் தந்தையும் இத் தாக்குதலில் காலை இழந்திருந்தார். இச் சிறுவனின் 4 வ்யதுச் சகோதரன் இத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தான்.
இச் சிறுவனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிரபாகரன் நிதியத்திலிருந்து [Pirapaharan’s Trust Fund] 100,000 ரூபாய்களை வழங்கியுள்ளார்.
ஆதாரம் : Tamilnet
மன்னாரில் 3 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மன்னார் நகரில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் இருவர் முஸ்லிம்கள், மற்றையவர் தமிழர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாரம் : Tamilnet
மட்டக்களப்பிலிருந்து தமிழ்மக்களை விரட்டிய பின் சனத்தொகைக் கணிப்பீடு : தமிழ் நா.உ க்கள் குற்றச்சாட்டு
அண்மையில் இலங்கை இராணுவம் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றினர்.
இந்த இராணுவ நடவடிக்கையால் ஏப்பிரல் 2007 ல் இருந்து இன்று வரை 250,000 தமிழர்கள் மட்டக்களப்பில் அகதிகளாக்கப்பட்டனர். இவர்களில் ஆக 75,000 பேரே இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.கிட்டத்தட்ட 25,000 பேர் தமிழகத்திற்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அரசு சனத்தொகைக் கணிப்பீட்டை நடத்தி அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்மக்களின் வாக்குரிமையை பறிக்கத் திட்டமிடுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆதாரம் : Tamilnet
தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு பிரிட்டன் புத்துயிர் அளிக்கிறது -ஜே.வி.பி சாடுகிறது
அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு பிரிட்டன் புத்துயிர் அளிக்கிறது என சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான ஜே.வி.பியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா பிரிட்டனைச் சாடியுள்ளார்.
ஜக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் பல சாட்டுக்கள் சொல்லி இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் ஏற்கனவே தலையிட்டு வந்தாலும், பிரிட்டனின் இத் தலையீடு மிகவும் ஆபத்தானது என்கிறார் சில்வா.
மேற்குலக நாடுகள் எப்போதும், சமாதனத்திற்கான உதவி, மனித மேம்பாட்டுக்கான உதவி, மனித உரிமை எனும் வார்த்தை ஜாலங்களோடு வந்து உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : டெய்லி மிரர்
ஜனாதிபதி ராஜபக்சாவின் எதிர்ப்பாளர்களுடன் சந்திரிகா சந்திப்பு

ஜனாதிபதி ராஜபக்சாவின் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவு எனும் அமைப்பை ஆரம்பித்திருக்கும் அணியினரை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இன்று சந்தித்துக் கருத்துப் பரிமாறினார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் சார்பில் மங்கள சமரவீர , ஸ்ரீபதி சூரியாராச்சி, ரிரான் அலஸ், விபுலாங்கனி மலாகமுவ, சிசில் பண்டார செனவிரத்ன ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஆதாரம் : Lanka Dissent
யாழ்ப்பாணத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சிறப்பு அடையாள அட்டை பெற வேண்டும் : இலங்கை இராணுவம்
10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் யாழ்ப்பாணத்தில் விசேட அடையாள அட்டைகள் வழங்க இராணுவம் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் 15 வயதுக்கு அதிகமான அனைவருக்கும் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தது, தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வேறு நபர்களின் வருகையைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசேட அடையாள அட்டை நடைமுறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் இவை வழங்கப்படவுள்ளன எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதாரம் : Lanka Dissent
Posted by
வெற்றி
at
10:23 PM
1 comments
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமார்
சென்னை : நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று சென்னையில் உதயமானது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று புதிய கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கட்சியின் கொடியை இன்று சரத்குமார் அறிமுகப்படுத்தினார். இந்த விழாவிற்கு சரத்குமார் தலைமை வகித்தார். கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார். நடிகர் சரத்குமார் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அவைத் தலைவராக முருகன், துணைத்தலைவராக எர்ணாவூர் நாராயணன், பொருளாளராக கரு.நாகராஜன், துணை பொதுச் செயலர்களாக ஏ.எல்.சுந்தரேசன், சீனியம்மாள், ரவீந்திரன் துரைசாமி, கொள்கை பரப்பு செயலராக மருது.அழகுராஜ், தலைமை நிலைய செயலராக ஜெயபிரகாஷ், நிதிநிலைச் செயலராக ரகுபதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நன்றி: தினமலர்
Posted by
சிவபாலன்
at
9:52 PM
10
comments
டையனா - 10ஆம் ஆண்டு நினைவு
மறைந்த இங்கிலாந்து இளவரசி டையனாவின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி இங்கிலாந்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.
அவர் குடும்பத்தினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் 'உலகின் தலைசிறந்த அன்னை' என டையனாவின் மகன் இளவரசர் ஹாரி பேசினார். டையனாவின் வீட்டின் முன் பொதுமக்கள் பலரும் மலர்கொத்துக்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இளவரசர் சார்லசின் மனைவி கமில்லா கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Diana Remembered at Memorial Service Forbes, NY -
UK Remembers Diana on 10th Anniversary of Death
Princes lead Princess Diana memorial service
Diana Memorial: Camilla's Empty Chair
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:17 PM
0
comments
25 ரன் அதிகம் பெற்றிருந்தால் வெற்றி - திராவிட்
மான்செஸ்டர், ஆக. 31:
மான் செஸ்டரில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படு தோல்வி அடைந்தது.
கண்ணுக்குத் தெரிந்த வெற்றி கை நழுவிப்போனது வருத்தம் அளிப்ப தாகவும், இந்திய அணி இன்னும் 25 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப் போம் என்றும் திராவிட் கருத்து தெரிவித்து உள்ளார். ஏழு போட்டிகள் கொண்ட இத் தொடரில் 31 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.
Posted by
சிவபாலன்
at
9:10 PM
5
comments
விஜயகாந்த் 2 நாள் கெடு
சென்னை, ஆக. 31:
சென்னை நகரில் மலை போல குப்பைகள் குவிந்துகிடப்பதால் முடைநாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே, உடனடியாக குப் பைகளை எடுக்காவிட்டால் எனது தலைமையில் 2ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) முதல் குப்பைகள் அகற்றப் படும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.
Posted by
சிவபாலன்
at
9:05 PM
3
comments
துப்புரவு பணியில் புதிய நிறுவனம் தோல்வி - ஒப்பந்தம் ரத்தாகிறது
சென்னை, ஆக. 31:
மூன்றாவது மண்டலத்தில் துப்புரவு பணி செய்ய தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதேபோல மற்ற 3 மண்டலங்களில் இருந்தும் அந்த நிறுவனத்தை வெளியேற்ற மாநகராட்சி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேயர் கூறினார்.
மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.
Posted by
சிவபாலன்
at
8:54 PM
3
comments
கற்பழிப்பு வழக்குகளை பெண் நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்
புதுடெல்லி, ஆக. 31-
கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்ற வழக்குக ளை கூடிய மட்டும் பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என உள்விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை கோட்பாடுகள் திருத்த மசோதா, உள்விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தி பல்வேறு பரிந்துரைகளை தற்போது இந்தக்குழு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.குழு செய்த பரிந்துரைகள் வருமாறு:
கற்பழிப்பு வழக்குகளை கூடிய மட்டும் பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் மருத்துவர் ஒருவரது மேற்பார்வையில் தான் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். புகார் கொ டுத்த பெண்ணை காவல்நிலையத் துக்கு அழைத்து வராமல் அவரது வீட்டில் வைத்தே விசார ணை நடத்த வேண்டும். விசாரணையை பெண் போலீஸ் அதிகாரி மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் 18 வயதுக்கு குறைந்தவராக இருந்தால் விசாரணையின் போது அவரது பெற்றோர் அல்லது சமுக பணியாளர் ஒருவர் உடன் இருக்க வேண்டும். சிறுமிகள் கற்பழிப்பு வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற போர்வையில் ஒருவரை காவல் நிலையத்தில் அடைத்து வைக்கக்கூடாது. தனிநபர் சுதந்திரம் மிக முக்கியம். சாட்சிகள் பல்டி அடிக்காமல் இருக்க அவர்களது வாக்குமூலத் தை எழுத்துபூர்வமாக கையப்பத்துடன் எழுதி வாங்க வேண்டும். மேலும் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களில் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் வாங்க வேண்டும்.
இவ்வாறு பல பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ளது. இவற்றில் பலவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக நிலைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.
Posted by
சிவபாலன்
at
8:48 PM
2
comments
இளையராஜாவுக்கு என்.டி.ஆர். விருது - ஆந்திர அரசு அறிவிப்பு
சித்தூர், ஆக.31-
நடிகர்கள் கிருஷ்ணா, அம்பரிஷ், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு ஆந்திர அரசு சார்பில் என்.டி.ஆர். விருது வழங்கப்படுகிறது.
ஆந்திரா மாநில அரசு சிறந்த கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ராமராவ் பெயரில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. 2002க்கு பின்னர் விருது வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
ராஜசேகர ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த விருது வழங்குதல் தகவல் துறையில் இருந்து தெலுங்கு சினிமா துறை வளர்ச்சி கழகத்துக்கு மாற்றப்பட்டது.
விருது பெறும் நபர்களை தேர்வு செய்து, அரசுக்கு சிபாரிசு செய்ய 3 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இதில் டி.எல். காந்தாராவ், எம். பாலையா, எம். மோகன்பாபு ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்த கமிட்டி 2003 முதல் 2005 வரை 3 ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பெயரை சிபாரிசு செய்து, மாநில தகவல் துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயணரெட்டியிடம் அனுப்பியது.
இதையடுத்து என்டிஆர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஐதராபாத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நேற்று அறிவித்தார்.
அதன்படி 2003ம் ஆண்டுக்கான விருது தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்கும், 2004ம் ஆண்டுக்கான விருது இசைஞானி இளையராஜா வுக்கும், 2005ம் ஆண்டுக்கான விருது பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ§க்கும வழங்கப்படுகிறது, இதற்கான விழா விரைவில் நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.
Posted by
சிவபாலன்
at
8:40 PM
0
comments
குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ படம் வெளியீடு
அரசு அலுவலகங்களிலும் தூதரகக் கட்டிடங்களிலும் இடம் பெற குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் அவர்களின் அதிகாரபூர்வ நிழற்படம் இரு வார காலமாக தீர்மானமாகாமல் கடைசியாக வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை புடைவையில் நீல பார்டரோடு தங்க கோடிட்ட படத்தை குடியரசுத்தலைவரின் நிழற்பட பிரிவு குடியரசுத்தலைவரின் செயலகத்திலிருந்து அனுமதி பெற்று வெளியிட்டது. இந்தப் படத்தில் புடைவையின் பல்லு பகுதி அவரது தலையை மறைக்குமாறு உள்ளது. முன்னர் வெளியான படத்தை குடியரசுத்தலைவரின் செயலகம் ஆட்சேபித்ததால் திரும்பப் பெறப்பட்டது.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
7:39 PM
2
comments
அதிகாரமிக்க முதல் பத்து பெண்களில் சோனியா
பிரபல வணிக இதழ் ஃபோர்பஸ் வெளியிடும் உலகின் நூறு அதிகாரமிக்க பெண்கள்
வரிசையில் ஐந்தாவதாக இந்திய அமெரிக்கரும் பெப்சி நிறுவன தலைவர்மற்றும் முதல் நிர்வாகியுமான இந்திரா நூயி இடம்பெற்றிருக்கிறார். இவரை அடுத்து ஆறாவது இடத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி இடம் பெற்றுள்ளார்.
ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ள அஞ்செலா மெர்க்கில் இரண்டாவது வருடமாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் சீன துணை பிரதமர் உ யி யும் சிங்கப்பூரின் டெமெஸ்க் நிறுவன முதல் நிர்வாகி ஹோ சிங் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டெலெஸ்சா ரைஸ் நான்காம் இடத்தில் உள்ளார்.
சோனியா காந்தியைப் பற்றி இவ்விதழ் இத்தாலியில் பிறந்த இந்தியாவின் மிகுந்த அதிகாரமிக்க இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தான் அரசியலில் 1990இல் இறங்கியபின்னர் வெகுதூரம் வந்துள்ளார் எனக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவராக பிரதீபா பாட்டில் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு இவரது பங்கை சிறப்பாக கருதுகிறது.
முழு கட்டுரைக்கு Sonia Gandhi, Indra Nooyi among world's 10 most powerful women-Politics/Nation-News-The Economic Times
Posted by
மணியன்
at
7:17 PM
4
comments
சேதுசமுத்திரம் திட்டத்திற்கு இடைக்கால தடை
உச்சநீதிமன்றத்தில் இன்று சேது சமுத்திரம் திட்டத்தில் ராம் சேது எனப்படும் மணற்பரப்பை பாதிக்காமல்
அகழ்வுப் பணி தொடரலாம் என்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தடை செப்.14வரை இருக்கும். முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறது இந்த ரீடிஃப் செய்தி
Posted by
மணியன்
at
6:55 PM
0
comments
அணுசக்தி பயன்பாட்டில் இந்தியா பின்தங்க முடியாது: பிரதமர்
இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்ட அமைதிக்குப் பிறகு தாராபூர் அணுசக்தி நிலையத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா அணுசக்தி பயன்பாட்டினால் கிடைக்கும் வளங்களை இழக்கலாகாது எனக் கூறினார். Fast reactor நுட்பங்கள் விரைவாக மேம்படுத்தப்படவேண்டும் என்றும் உள்நாட்டிலேயே யுரேனியம் கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார். மகாராட்டிரத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த அணுசக்தி நிலையத்தில் புதிய இரு அணுசக்தி ஆலைகளை நாட்டிற்கு அர்ப்பணித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.
We can't afford to miss nuclear bus: PM
Posted by
மணியன்
at
6:44 PM
0
comments
மான் வேட்டை:சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தது
சிங்காரா மான் வேட்டை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டை விசாரித்த இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு இலக்கம் ரூபாய் ஈட்டுப்பணமும் ரூ50,000க்கு கடன்பத்திரமும் பெற்று ஜாமீனில் விட உத்திரவிட்டது. வழக்கின் விசாரணை 24 அக்டோபருக்கு தள்ளிப் போடப்பட்டது.
முழு விவரங்களுக்கு Rajasthan HC grants bail to Salman
Posted by
மணியன்
at
6:30 PM
0
comments
அறிவியல்/தொழில்நுட்ப செய்திகள்
உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டி
------------------------------------------------------------
உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டியை ஜப்பானின் ஷார்ப் (Sharp) நிறுவனம் பார்வையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது. இந்த தொலைக்காட்சிப்பெட்டியின் தடிமன் வெறும் 20mm-கல் தான். இதை சுவற்றில் ஒரு படம் போல மாட்டிவைக்க முடியும்.
இந்த தொலைக்காட்சிப்பெட்டி எப்பொழுது சந்தையில் விற்கப்படும் என்று தெரிவிக்கபடவில்லை.
இந்த செய்தி பற்றிய இணையப்பக்கம் இதோ
புற்றுநோய்க்கு ஒரு புது மருந்து
-----------------------------------------
எய்ட்ஸ் நோய்க்காக உபயோகப்படுத்தப்பட்ட ஒரு மருந்து புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய திரன் கொண்டது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த செய்தியை பற்றி அறிய இந்த இணைப்பை சொடுக்குங்கள்
ஆதாரம் :
http://www.reuters.com/article/technologyNews/idUSL3050290720070830
http://www.reuters.com/article/scienceNews/idUSN3045790520070831
Posted by
CVR
at
6:07 PM
0
comments
b r e a k i n g n e w s...