.

Tuesday, March 20, 2007

நான்கு விக்கெட்டுகளை இழந்தது பெர்முடா

முதல் ஓவரை ஜாகிர்கான் வீச, துவக்க ஆட்டக்காரரான பிட்சர் எதிர்கொண்டார். ஓவரின் கடைசி பந்தில் போல்டு ஆக ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதையடுத்து அவுட்டர்பிரிட்ஜ்சுடன், பார்டன் ஜோடி சேர்ந்தார். ஏழாவது ஓவரை ஜாகிர்கான் வீச அவுட்டர்பிரிட்ஜ் எதிர் கொண்டு 6.2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.ஆனால் 6.3 வது பந்தில் ஜாகிர் பந்து வீச்சில் கிளின் போல்டு ஆகி பரிதாபமாக வெளியேறினார்.


மூன்றாவது விக்கெட்டாக பார்டன் படலேனின் பந்துவீச்சில் LBW முறையில் 13 ஓட்டங்களுக்கு அவுட் ஆனார்.

நான்காவதாக கும்பளேவின் பந்துவீச்சில் ரோமைன் ரன் ஏதும் எடுக்காமல் LBW முறையில் அவுட் ஆனார்

முன்னதாக பேட் செய்த இந்தியா 413 ரன்களை எடுத்து வரலாறு படைததுள்ளது.

இதுவரை நடந்துள்ள உலக கோப்பை போட்டிகளில் இந்தியாதான் அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ள பெருமையை தட்டிச் சென்றுள்ளது.


இன்றைய போட்டியில் 16 சிக்சர்களும், 31 பவுண்டரிகளும் அடித்து இந்தியர்கள் வெளுத்துள்ளனர். இந்தியா மீது எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா அணி இன்று சிறப்பாக செயல்பட்டுள்ள்து.

மொத்தத்தில் இன்றைய போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.

- Yahoo Tamil

3 comments:

Anonymous said...

so funny

Anonymous said...

indians chickens...... its not really a game... chinnapullai thanama irukku

✪சிந்தாநதி said...

பெர்முடா 43.1 ஓவரில் 156 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. டேவிட்ஹெம்ப் 76 ரன் எடுத்தார்.

இந்தியா 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில்

ஜிம்பாப்பே மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்பே 50 ஓவரில் 202/5 எடுத்திருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 47.5 ஓவரில் 204/4 எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

-o❢o-

b r e a k i n g   n e w s...