.

Monday, May 14, 2007

சற்றுமுன்:- பிளஸ்-2: சென்னை டிஏவி பள்ளி மாணவி ரம்யா

சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் சென்னை மாணவி ரம்யா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோபாலபுரத்திலுள்ள டிஏவி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யா 1182 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதே பள்ளியைச் சேர்ந்த ரூபிகா 1180 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்த ஜெயமுருகன், நாமக்கல்லை சேர்ந்த நிவேநிதா, இளவரசன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் 1179 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

மதிப்பெண் சான்றிழ்கள் வரும் 25க்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...