.

Monday, May 14, 2007

சற்றுமுன்: தினகரன் மீதான தாக்குதல்: விசாரிக்க ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில் குழு

மதுரை: மதுரையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க தென் மண்டல ஐஜி தலைமையில் குழு அமைக்கப்படும் என டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.

மதுரையில் புதிய காவல்நிலைய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,

மதுரையில் நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. இதில் காவல் துறையின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என விசாரிக்க தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையை அரசுவிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த குழுவிற்கு எந்த கால அவகாசமும் விதிக்கப்படவில்லை.

இந்திய அளவில் கணக்கிடும் போது தமிழகத்தில் காவல் நிலையங்கள் போதுமானதாக உள்ளன. மக்கள் தொகைக்கு தகுந்தவாறு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை வாகனங்களுக்கான எரிபொருள் அளவை உயர்த்தி கொடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.

நன்றி:- தட்ஸ் தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...