.

Monday, May 14, 2007

ச:'மாறன் ஆட்சி அதிவேக வளர்ச்சிக்காலம்'

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறையினர் தயாநிதி மாறனின் பதவி விலகலால் அதிர்ச்சியுற்றுள்ளதாகத் தெரிகிறது. மாறனால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளும் திட்டங்களும் தொடருமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் டி.வி இராமச்சந்திரன்,"(மாறன் ஆட்சியின்) சாதனைக்களை எல்லோரும் கண்கூடாகக் காண இயல்கிறது. கடந்த மூன்று வருடங்களும் தொலைத்தொடர்புத் துறை அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது...அவர் இந்திய தொலைத்தொடர்புத் துறையை மிக வேகமாக வளரச் செய்துள்ளார்." என்றார்.

மாறனின் நீக்கம் தொலைத் தொடர்புத் துறையை பாதிக்காது என நம்புவதாகவும் தெரிவித்தார்.

10பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தொலைத்தொடர்பு, தகவல் தொழிநுட்பத் துறையில் முதலீடுகள் மாறன் ஆட்சியில் வந்துள்ளன.

இவ்விரு துறைகளும் மாறனின் கீழ் பல மைல்கல்களைத் தாண்டியுள்ளன.

நாஸ்காம்(NASSCOM) செய்தி அறிக்கை ஒன்றும் மாறைனை வெகுவாகப் பாராட்டியுள்ளது.

Industry hails Maran's tenure as high growth trajectory The Hindu
"Dayanidhi Maran has been a great champion and friend of the Indian IT sector. NASSCOM on behalf of the Indian IT industry, would like to put on record its appreciation of the very positive and important role played by Maran in sustaining the growth of this industry over the last 3 years", IT association NASSCOM said in a statement.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...