வாராணசி, மே 4: மறைந்த ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர், வியாழக்கிழமை நடந்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை 'குடும்பத்தாருக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை விரைவில் நிறைவேற்றவேண்டும்' என்று கோரி புறக்கணித்தனர்.
பிஸ்மில்லா கான் மறைந்தவுடன் அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவி, அவரது பெயரில் கலாசார அகாதெமி, உஸ்தாத் நினைவரங்கம் அமைக்க நிதி என பல்வேறு வாக்குறுதிகள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டன. அவர் மறைந்து 8 மாதங்கள் ஆன பிறகும் வாக்குறுதிகளில் பல இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்று பிஸ்மில்லா கானின் மகன் நய்யார் ஹுசைன் தெரிவித்தார்.
'குடும்பமே வறுமையில் வாடுகிறது. அதை சமாளிக்க எங்களுக்கு பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு செய்யவேண்டும்' என்றார் ஹுசைன்.
Dinamani
Friday, May 4, 2007
பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர் உ.பி. தேர்தலைப் புறக்கணிப்பு
Labels:
ஆளுமை,
இசை,
இந்தியா,
கலை-இலக்கியம்,
சர்ச்சை
Posted by
Boston Bala
at
11:28 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment