.

Tuesday, July 24, 2007

3ஆம் வகுப்பு மாணவி பாலியல்பலாத்காரம்

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு துணைபோன பள்ளியின் உதவி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் சென்னையில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திர்யா வித்யாலயா பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவியை பள்ளியின் லேப்டெக்னீஷியன் செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்றும், இச்சம்பவத்திற்கு துணைபோன உதவி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஞானம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை இன்று முற்றுகையிட்டனர். தி.நகர் துணை ஆணையர் லட்சுமி நேரில் வந்து பெற்றோர்களின் சார்பில் பள்ளி முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தமினார். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் துணை ஆணையர் லட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்பின்னர் பெற்றோர்கள் கலைந்துசென்றனர்

2 comments:

Sivakumar said...

இந்த கொடுமை ஓயவே ஓயாதா?

சின்னப் பையன் said...

முதல்லே மைனர் கு*சை சுட்டுடுதான் அடுத்த வேலை பார்க்கணும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...