.

Monday, July 16, 2007

ரூபாயின் மதிப்பு மேலும் உயரலாம்

பிரதமரின் பொருளாதார அறிவுறுத்தல் கமிட்டி இன்று புதுடெல்லியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் GDP வளர்ச்சி அடுத்த ஆண்டு 9% இருக்கும் எனவும் ரூபாயின் மதிப்பு மேலும் உயரலாம் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் செய்திக்கு " THE HINDU.."

7 comments:

சிவபாலன் said...

இந்தியாவிற்கு பணம் அனுப்புவர்கள் கொஞ்சம் உசராகிக்கொள்ளவும்!

நாமக்கல் சிபி said...

சிபா!

இது எந்த வகையில் உள்நாட்டு விலைவாசிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்!

அன்னியச் செலவாணிகளில் வேண்டுமானால் இதன் பாதிப்பு இருக்கலாம் என்று நினைக்கிறேன்!

சிவபாலன் said...

சிபி,

முதலிடுகள் அதிகம் உள்ளே வருவதால் Liquidity மேலாண்மை பெரும் சவாலக இருப்பதாகவும் அதனால் ரூபாய் மதிப்பு அதிகரிப்பதன் மூலம் வெளியில் செல்லும் முதலிடுகளை அதிகரிக்கும் உள் முதலிடுகள் சீரமையும் என கருதுகிறார்கள்.

நான் அறிந்தவரையில், ஏற்மதி நிறுவனங்கள் பாதிப்படையும். அதே சமயம் மூலப்பொருள் வாங்கும் திறன் அதிகமாகும்.

பணவீக்கத்தை 4% அளவிலேயே நிறுத்தும் முயற்சி என நான் கருதுகிறேன்.( ஏனென்றால் சில மாதங்களுக்கு முன் பணவீக்கம் அதிகமானது நினைவிருக்கலாம்)

மேலும் 2010ல் வளர்ச்சி 8% இருந்தால் வேலை தேடுவோர் எண்ணிக்கையும் வேலை வாய்ப்பும் சம்மாகும் எனவும் கருதுகிறார்கள்.

இது 2009 தேர்தலை முன் நிறுத்தி நட்க்கும் உத்தி என சில பத்திரிக்கைகள் விமர்ச்சித்துள்ளன. பார்க்கலாம் என்ன நடக்கிறது என..

Boston Bala said...

---எந்த வகையில் உள்நாட்டு விலைவாசிகளில் பாதிப்பை ஏற்படுத்து---

எனக்குப் புரிந்தவரையில்...

பத்தாண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவில் (தாய்லாந்து, இந்தோனேஷியா, தென் கொரியா நாடுகளில்) பங்குச்சந்தை பெரிய அளவில் வீழ்ந்தது. அதனால் வேலைவாய்ப்பின்மையும், பொருளாதார மந்தநிலையும் தொடர்ந்தது.

அப்போதைய நிகழ்வுக்கு காரணமாக

--> பங்குகளின் வரலாறு காணாத ஏறுமுகம்
--> பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு
--> முதலீட்டாளர்களின் ஆர்வத்தில் சுணக்கம் ஏற்படுதல்

முதல் இரண்டும் இந்தியாவில் தற்போது நடக்கிறது.

சீனாவைப் போல், இந்திய ரூபாயின் மதிப்பு முழுக்க முழுக்க அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப் படுவதில்லை. இதனால், சேமிப்புக்கு கிடைக்கும் வட்டி, பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபத்தைத் தொட்டு விட்டால், பத்தாண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவில் ஏற்பட்ட சரிவு, இந்தியாவில் நிகழும் வாய்ப்பிருக்கிறது.

சிவபாலன் said...

Baba,

The US market is also showing "growing" trend..

Any comments?

Boston Bala said...

---The US market is also showing "growing" trend.---

வீடு மார்க்கெட் இன்னும் எழுகின்ற அறிகுறி எதுவும் தெரியவில்லை. நடுவண் வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் அறிகுறி எதுவுமில்லை. பங்குச்சந்தையில் போட்டால் மட்டுமே, பணம் குட்டி போடும் என்னும் நிலை இருப்பதால், இன்னொரு 9/11 நிகழாதவரை இப்படியே தொடரும்.

அடுத்த வருஷம் தேர்தல் (ஆட்சி மாற்றம்) வேற வருது. எனவே, ரொம்ப இறங்காது. பெரிதாக ஏறவும் ஏறாது.

Boston Bala said...

related piece: India's economy | Waiting for the monsoon | Economist.com: "The economy continues to overheat despite a rising currency and recent signs of falling inflation"

-o❢o-

b r e a k i n g   n e w s...