.

Wednesday, July 4, 2007

விஞ்ஞானி அருணாசலத்துக்கு விருது.

முன்னோடியான விஞ்ஞானி அருணாச்சலத்திற்கு இந்த ஆண்டுக்கான பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1980களில் இந்திய ஏவுகணை திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர் விஞ்ஞானி அருணாச்சலம். மத்திய ராணுவ அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய அருணாச்சலம், மிகச் சிறந்த தொழில்நுட்ப அறிஞர். தற்போது அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திட்ட கல்வி மையத்தின் தலைவராக இருக்கும் இவருக்கு, இந்தாண்டுக்கான பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கம் வழங்கப்பட்டுளளது. இந்த பதக்கத்தை டில்லியிலுள்ள இந்திய தேசிய அறிவியல் கழகம் வழங்கியுள்ளது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானி அல்லது தொழில்நுட்ப பொறியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த பதக்கத்துடன், ரூ.பத்தாயிரம் ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பானர்ஜி மற்றும் தேசிய தொலை தூர புலனறி அமைப்பின் முன்னாள் இயக்குனர் தீக்ஷதலு ஆகியோர் பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கத்தை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்


நன்றி: தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...