.

Wednesday, July 4, 2007

தமிழகத்தில் எலி சுரத்திற்கு இருவர் பலி

இராமநாதபுரம் மாவட்ட கிராமம் ஒன்றில் எலி சுரம் எனச் சொல்லப்படுகின்ற லெப்டோஸ்பிரோசிஸ் நோயினால் 75 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இருவர் மரணமடைந்துள்ளனர் என்றும் அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது. கிடாதிருக்கை கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலு (65), இராமபாண்டி (50) ஆகியோர் இந்த நோயினால் மரணமடைந்தனர் என்று அந்தக் குறிப்பு கூறுகிறது. எலியின் மூத்திரத்தினால் மாசாக்கப்பட்ட நீரை குடித்ததனாலேயே இம்மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மண்டல தொற்றுநோய் மைய அதிகாரி குமார் கூறினார்.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...