.

Monday, August 27, 2007

நாடு முழுதும் 150 விமான தளங்களைப் பயன்படுத்தத் திட்டம்

நாடு முழுவதும் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பயன்படுத்தப்படாமல் உள்ள 150 விமான தளங்களை பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் மாநில அரசுகளின் முதலீட்டில் இவற்றை இயக்கச் செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

உலகப் போரின் போது ராணுவத்தின் பயன்பாட்டுக்கும், அவசரமாக போர் விமானங்கள் தரையிறங்குவதற்கும் நாடு முழுவதும் ஏராளமான விமான தளங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் தற்போது 150க்கும் மேற்பட்ட குட்டி விமான நிலையங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

தற்போது, இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேவையை சமாளிக்க கூடுதல் விமான நிலையங்களை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இதற்காக தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள விமானத் தளங்களை விமான நிலையங்களாக மாற்றி இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...