.

Monday, August 27, 2007

சந்திரபாபு நாயுடு மகன் பாலகிருஷ்ணா மகளை மணந்தார்

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. தனது மாமாவும், நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகள் பிராமிணியை அவர் மணந்தார்.

எளிமையாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, நாகேஷ்வர ராவ், ஜெயசுதா, கிருஷ்ணம் ராஜூ உள்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் திருமண நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பிற பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் முதல்வர் ராஜசேகர ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவரது சார்பில் சபாநாயகர் கே.ஆர். சுரேஷ் ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், தெலுங்கு சினிமா உலகில் நீங்கா இடம் பெற்ற, மறைந்த என்.டி. ராமராவின் மகன் ஆவார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...