.

Monday, August 27, 2007

மூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு இலக்கு 282 ரன்கள்

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒரு தின கிரிக்கெட் போட்டி எக்பாஸ்டனில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான குக் மற்றும் பிரையர் ஆகியோர் முறையே 40 ரன்கள், 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பீட்டர்சன் 9 ரன்களிலும், காலிங்வுட் 44 ரன்களிலும், ஷா 19 ரன்களிலும், போப்ரா 10 ரன்களிலும், இயான் பெல் 79 ரன்களிலும், ப்ராட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ட்ரெம்லெட் 19 ரன்களுடனும், ஆன்டர்சன் 0 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பியூஸ் சாவ்லா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், முனாப் படேல், ரமேஷ் பொவார், ஆர்.பி.சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணி 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்க உள்ளது

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...