.

Tuesday, August 7, 2007

கங்கையில் படகு மூழ்கியது: 80 பேர் பலி

பிகாரில் கங்கை ஆற்றில் 130 பேருடன் சென்ற படகு திங்கள்கிழமை மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர். இன்னும் 100 பேரைக் காணவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சைதாபாதிலிருந்து பதர்காட் நோக்கி படகு சென்று கொண்டிருந்தது. அப்போது கிழக்கு நோக்கி கடுமையான காற்று வீசியது. இதில் நிலைகுலைந்த படகு, நடு ஆற்றில் அப்படியே மூழ்கியது என சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் தெரிவித்தார்.

தினமணி

The Hindu : Front Page : 80 feared drowned in boat tragedy

1 comment:

மாசிலா said...

மிகவும் சோகமான நிகழ்ச்சி. எத்தனை குடும்பங்கள் இதனால் துன்பத்தில் சிக்கி அலைகழிய போகிறதோ!
:-(

-o❢o-

b r e a k i n g   n e w s...