.

Tuesday, August 7, 2007

குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட்டால் இரண்டாவது தேனிலவுக்கு சன்மானம்

இந்தியாவின் மாநில அரசு ஒன்று, புதுமண தம்பதிகள் தங்களின் முதல் குழந்தை பிறப்பை இரண்டு முதல் மூன்றாண்டுகள் தள்ளிப் போட்டால், அவர்களின் இரண்டாவது தேனிலவுக்காக ஐந்தாயிரம் முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, மேற்கிந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் இருக்கும் சடாரா மாவட்டத்தில், தங்களின் முதல் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் புதுமண தம்பதிகளுக்கு, இரண்டாவது தேனிலவுக்கான நிதி உதவி செய்யப்போவதாக அரசு அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

இந்த மாவட்டத்தில் முப்பது லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் இருபத்தையாயிரம் தம்பதிகள் புதிதாக திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இவர்களில் சுமார் 85 சதவீத புதுமண தம்பதிகள் திருமணமான முதல் ஆண்டு முடிவதற்குள்ளாகவே தங்களின் முதல் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த போக்கை மாற்றவே இந்த புதிய திட்டம் முயற்சி செய்வதாக தெரிவித்தார் மாவட்ட சுகாதார அதிகாரி வி.எச்.மொஹிதே.

தமிழ் பிபிசி

BBC NEWS | South Asia | Honeymoon offer to delay babies
Delay a baby and win a second honeymoon - India - The Times of India
Honeymoon at state's expense - Pune

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...