.

Tuesday, August 7, 2007

இலக்கியத்தை மக்களிடம் கொண்டுசென்ற புத்தகங்கள் - அவ்வை நடராஜன்

ஈரோடு, ஆக. 7-
ஈரோடு வஉசிமைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் கடந்த 27ம் தேதி முதல் நேற்று வரையிலும் 11 நாட்களாக புத்தக திருவிழா நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில் தலைவர் ஸ்டாலின்குணசேகரன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் அவ்வைநடராஜன் பேசியதாவது:
மக்களின் சிந்தனையை வளர்க்க நூல் பயன்படுகிறது. இந்தியாவை காட்டிலும் சிறிய நாடாக இருக்கும் ஜெர்மனி நாட்டில் பெரும் தொழிற்புரட்சியும், அறிவுப்புரட்சியையும் புத்தகங்களே ஏற்படுத்தியது. முன்பெல்லாம் அரசவைகளில் மட்டுமே இலக்கியம் வளர்ந்தது. இதனால் அரசர்களும், அறிவார்ந்தவர்களும் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியம் இருந்தது. பாமர மக்களுக்கும், நூல்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. ஆனால் புத்தகம் அச்சிட தொடங்கி அனைத்து தரப்பினரும் படிக்கத்துவங்கிய பிறகே மக்கள் மத்தியில் அறிவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டது. படைப்பவன், பதிப்பவன், படிப்பவன் என பலத்தரப்பினருக்கும் பயன்படும் அறிவுப்பெட்டகம் புத்தகம் மட்டுமே. நம்மை விட்டு மறைந்தவர்களை நாம் பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் விட்டு சென்ற எழுதி தந்த புத்தகங்கள் நம்மை தொடர்ந்து வழி நடத்தி செல்லும்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...