.

Tuesday, August 7, 2007

ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஆதர்டன்

டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீசாந்தின் நடவடிக்கைகள் கிரிக்கெட் போட்டியின் உன்னதத் தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது என்றார்.

கேப்டன் வான் தோள் பட்டை மீது இடித்ததற்காக மட்டுமே நடுவர்கள் ஸ்ரீசாந்துக்கு அபராதம் வித்தித்துள்ளதாகவும், அவரது பந்துவீச்சு வெறுப்புடன் வீசப்பட்ட ஒன்று என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீசாந்தின் செயலை நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், இந்திய கேப்டன் டிராவிட் இதற்கு பொறுப்பேற்று ஓவலில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆதர்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.

MSN Tamil

NDTV.com: Sreesanth must be banned: Atherton
Cricinfo - Sreesanth must be banned for beamer: Atherton

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...