.

Tuesday, August 7, 2007

தாவூத் இப்ரஹாம் மீது கொலை முயற்சி:கராச்சியில் வதந்தி ?

இந்தியாவில் தீவிரவாதத்திற்காகவும் பிற குற்றங்களூக்காகவும் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ரஹாமை அவரது ஓட்டல் காவிஷ் க்ரௌன் பிளாசா அருகே கொலைசெய்ய முயன்றதில் அவர் தப்பியதாக கராச்சி நகரெங்கும் வதந்தி பரவியுள்ளது. சிந்து மாகாண தலைமைக் காவலர் இதனை மறுத்துள்ளபோதிலும் அரசின் 'தாவூத் பாகிஸ்தானில் இல்லை' என்ர கூற்றிற்க்கு ஒப்ப அவர் கூறியுள்ளதாக விதயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

DNA - World - Karachi abuzz with rumours of attack on Dawood - Daily News & Analysis

3 comments:

மணியன் said...

ஜீ ்செய்தி தொலைக்காட்சியின்படி பாகிஸ்தானின் ISI காவலர்கள் தாவூத் இப்ரஹாம், சோட்டா சகீல் மற்றும் டைகர் மேமன் ஆகியோரை கைது செய்துள்ளதாகக் கூறுகிறது. பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் எல்லையில் தங்கள் மறைவிடத்திலிருந்து பிடிபட்டதாக அந்த செய்தி கூறுகிறது. அமெரிக்காவின் அழுத்தத்தால் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என கருதப் படுகிறது. அமெரிக்கர்கள் தாவூத்தை பிடித்து முஷரப் அரசிற்கு தர்மசங்கடம் ஏற்படுத்துமுன்னர் அரசே இச்செயலை செய்திருக்கலாம் எனவும் அந்த செய்தி கூறுகிறது.

நிச்சயமற்ற செய்திகளின் பின்னணியில் நடந்தேறுவது என்ன என்பது மர்மமாகவே உள்ளது.
Zee News - ISI nabs Dawood, Shakeel and Memon in Karachi?

Boston Bala said...

கைதாகி, பாகிஸ்தானில் செய்த (சில்லறை) குற்றங்களுக்கு தண்டனை விதித்து, சொகுசாக சிறையில் வாழ்க்கையைத் தொடரும் திட்டம்?

Anonymous said...

அப்படி இருக்க வாய்ப்பில்லை,
அங்கிள் சாம் அனுப்பி வைக்கச் சொல்லாமல் இருக்கமாட்டாரே.

-o❢o-

b r e a k i n g   n e w s...