.

Friday, August 3, 2007

'வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் பிரச்சனைக்குள்ளாகிறார்கள்'-ஆய்வு

சென்னை,டெல்லி, கொல்கொத்தா,மும்பை பெங்களூர் ஆகிய நகரங்களில் வேலைக்குச் செல்லும்1000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் எதிர்மறையான சூழல்களை சந்திப்பதாகத் தெரியவந்துள்ளது.

கணவனும், கணவன் வீட்டாரும் நவீன சிந்தனைக் கட்டுக்குள் வராமலிருப்பது இதற்கு ஒரு காரணமாய் அறியப்பட்டுள்ளது.

முக்கிய தெளிவுகள்

  • 38% பெண்கள் திருமணத்துக்குப் பின் உடல்ரீதியான கொடுமைகளை ஒருமுறையேனும் அனுபவித்துள்ளனர்.
  • 72% மனரீதியாக கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.
  • ஸ்திரமான வேலை உள்ள பெண்கள் உடல்ரீதியான தொடர் கொடுமைகளுக்கு அதிகம் ஆளாவதில்லை
  • தன் பேரில் சொத்து வைத்துள்ள பெண்களுக்கு கொடுமைகள் குறைவாக நடந்துள்ளன
  • தன் பெயரில் சொத்து வைத்துக்கொள்ளாதவர்களில் 35%பேர் தொடர் உடல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகீறார்கள்.
  • 80% கணவன் வீட்டார் வேலைக்குப்போகும் பெண்கள,் வேலையை விட வீட்டுக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என விரும்புகிறார்கள்.
'Working women face hostile conditions at home' - The Hindu

1 comment:

Boston Bala said...

நியூஸ் எங்கேயிருந்து பிடிச்சீங்க?

-o❢o-

b r e a k i n g   n e w s...