.

Monday, September 3, 2007

சிறுமியை கற்பழித்த சாமியார் கைது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள செங்கம்மாள் கோயிலில் கோவிந்தசாமி (65) என்ற துறவி உள்ளார். இவர் கோயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 12 வயதுயை கற்பழித்ததாக தெரிகிறது.

மேலும் நடந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கோவிந்தசாமி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., அசோக்குமார் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சாமியார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...