.

Monday, September 3, 2007

கல்பாக்கம் வான்வெளியில் விமானங்களுக்குத் தடை!

இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் போர் விமானங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் அணுசக்தி மையங்களில் ஒன்றான கல்பாக்கம் வான் பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்திய விமானப் படை ஏற்கெனவே விமானப் போக்குவரத்து துறையுடன் இணைந்து பணிகளைத் துவக்கிவிட்டது. இதையடுத்து எல்லாவித வான் போக்குவரத்தும் கல்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்திற்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அதிநவீன ராடார்கள் மூலம் அப்பகுதியை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...