.

Monday, September 3, 2007

மாநில வளர்ச்சி பகைமையை மறக்கடித்தது...பீஹாரில்

நிதீஷும் லாலுவும் அரசியலில் ஒருவருக்கொருவர் பகை பாராட்டினாலும் மாநில வளர்ச்சி என்று வரும்போது ஒருவரையோருவர் பாராட்ட தயங்கவில்லை. இன்று நீதியமைச்சர் பி.சிதம்பரம் ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த விழாவொன்றில் முதல்வர் நிதீஷ் குமார் பிஹாரில் உள்ள இரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவாரேயானால் அவரே நிரந்தர இரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும் எனக் கூறினார். லாலுபிரசாத் அவர்களும் நிதீஷ் குமார் இரயில்வே அமைச்சராக இருந்தபோது திட்டமிட்ட இரயில்பெட்டி தொழிற்சாலையை நான் முடித்து வைத்திருக்கிறேன்,அதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார். உடனிருந்த வேதியல் மற்றும் உரத்துறை அமைச்சர் பாஸ்வானும் நாங்கள் மூவருமே வெவ்வேறு அரசியல் அணிகளையும் கொள்கைகளையும் பின்பற்றுபவர்கள்; அரசியல் வேற்றுமைகளும் கொண்டவர்கள்;இருப்பினும் பிஹாரின் வளம் என்று வரும்போது மூவரும் சேர்ந்து உழைப்போம் என்றார்.
The Telegraph - Calcutta : Northeast

1 comment:

Boston Bala said...

மாநில வளர்ச்சியா? தனிநபர் வளர்ச்சியா ;)

-o❢o-

b r e a k i n g   n e w s...