.

Monday, September 3, 2007

நக்சல்களினால் பாதிக்கப்பட்ட இடத்தில் கால்-சென்டர் துவக்கம்

கிருஷ்ணகிரியின் சனசந்திரம் கிராமத்தில் ஊராட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலினால் 'அழைப்பு மையம்' வெள்ளிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது. ஃபாஸ்டரா (FOSTERA -fostering technologies in rural areas) அமைப்பின் உதவியுடன் இந்த கால்-சென்டர் துவங்கியது. இதனால், தமிழகத்தின் கிராமங்களையும் விப்ரோ, காமெட் போன்ற நிறுவனங்களின் வேலை சென்றடையும்.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 120 பேர் இதனால் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். நான்கு லட்சம் ரூபாய் அரசு மானியத்தின் உதவியுடன் கேளமங்கலம், தளி, மாத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம் போன்ற கிராமப்புற பகுதி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஐம்பது லட்சம் ஒதுக்கிடப்பட்டிருக்கிறது.

First rural call centre in naxalite-affected Tamil Nadu district
IndianExpress.com :: Geneva outsources, TN Naxal belt village gets a call centre
DNA - India - From naxal village to BPO hub - Daily News & Analysis

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...